கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் |
செய்தி சேனல் ஒன்றின் 360 டிகிரி உலகை சுற்றி என்ற நிகழ்ச்சி மூலம் சின்னத்திரைக்கு வந்தவர் சாந்தினி. பின்னர் அவரே அந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளராகவும் ஆனார். அதன் பிறகு திரைகடல், வானவில் லைப், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தற்போது வேந்தர் டி.வியில் புத்தம்புது காலை, ஹலோ டாக்டர், ரீல்பெட்டி ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். சீரியலில் நடிக்க வரும் வாய்ப்புகளை மறுத்து வருகிறார் சாந்தினி.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நான் வீட்டுக்கு ஒரே பிள்ளை அதனால் மீடியாவுக்கு அனுப்பவே வீட்டில் தயங்கினார்கள். ஆனால் இப்போது நான் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளால் அவர்கள் மனம் மாறி பாராட்டவும், ஊக்கப்படுத்தவும் செய்கிறார்கள். ஆனால் நடிக்க மட்டும் அனுமதிக்கவில்லை. எனக்கும் நடிப்பில் விருப்பம் இல்லை. அதனால்தான் பல வாய்ப்புகளை மறுத்தேன். நல்ல தொகுப்பாளினி என்று பெயர் வாங்கினால் போதும் என்கிறார் சாந்தினி.