அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
திரையுலகில் 'ஷி டாக்சி' படத்திற்கு பிறகு கொஞ்சூண்டு இடைவெளிவிட்ட காவ்யா மாதவன் மீண்டும் விரைவில் 'ஆகாசவாணி' படத்தின் மூலம் ரசிகர்களுக்கு தரிசனம் தரப்போகிறார். அவரது திரையுலக பயணத்தில் ஏற்பட்ட இந்த தொய்வுக்கு காரணம் அவரது திருமணமும் அதை தொடர்ந்து நடைபெற்ற விவாகரத்தும் தான். விவாகரத்துக்குப்பின் மறுமணம் பற்றி யோசிக்காமல் இருந்த காவ்யா மாதவன் இப்போது அதுபற்றி யோசிக்க ஆரம்பித்திருக்கிறாராம். ஆனால் சூடுபட்ட பூனை, மீண்டும் பாலை குடிக்க குடிக்க பயப்படுவது போல அவருக்கும் திருமணம் பற்றிய பயம் இன்னும் விலகாததால் மறுமணத்திற்கு சில கண்டிஷன்களை வைத்திருக்கிறாராம்..
முதாலாவது அரேஞ்ச்டு மேரேஜ் என்கிற முறையை தூக்கி தூர போட்டுவிட்டாராம்.. இனி மறுமணம் என்றால் அது நிச்சயமாக காதல் திருமணமாகத்தான் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். யாரோ முன்பின் அறியாத ஒருவருடன் வாழ்க்கையை நடத்துவதும், தன்னை சாதாரண பெண்ணாக நினைக்காமல் எப்போதுமே சினிமா பிரபலமாகவே நடத்தும் ஒருவருடன் குடும்பம் நடத்துவது என்பது கொடுமையான விஷயம் என்பதை வெளிப்படையாகவே சொல்லிவிட்டார் காவ்யா மாதவன்.
அதனால் தன்னுடன் நல்லமுறையில் நட்பாக பழகி, பின் அது காதலாக கனியும் ஒருவரைத்தான் திருமணம் செய்வது என்றும், குறிப்பாக தன்னை நடிகையாகவே நினைக்காத நபராக அவர் நிச்சயம் இருக்கவேண்டும் என்கிற நியாயமான கண்டிஷன்களை முன்வைக்கிறார் காவ்யா மாதவன்.. எப்படியோ சீக்கிரம் கல்யாணம் பண்ணி செட்டிலாகுங்க சேச்சி என்கிறார்களாம் மலையாள சகோதரர்கள்.