தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மானாட மயிலாட டைட்டில் வின்னர் ஸ்வேதா. அதற்கு பரிசாக அவருக்கு புதுச்சேரியில் வீடு பரிசு வழங்கப்பட்டது. அதையடுத்து, அடுத்த பிரபுதேவா, ஜோடி நம்பர் ஒன் உள்பட சில நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், கனா காணும் காலங்கள், கார்த்திகை பெண்கள் போன்ற தொடர்களில் நடித்திருக்கிறார். அதோடு புதுச்சேரியில் ஒரு நடனப்பள்ளியும் நடத்தி வருகிறார். தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...
நான் எனது 3 வயதில் இருந்து நடனமாடி வருகிறேன். நடனத்தை முறையாக பயின்றேன். பின்னர் கலா மாஸ்டர் மூலமாக மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அதில் 2010-ல் டைட்டில் வின்னராக வெற்றி பெற்றேன். அதன்பிறகு அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சியில் டாப் டென்னில் முதலாவதாக வந்தேன்.
பின்னர், 2011-ல் ஜோடி நம்பர்-ஒன்னில் பங்கேற்று வந்தேன். அப்போது ஒருநாள் நான் ஷோ முடித்து விட்டு பஸ்ஸில் சென்று கொண்டிருந்தபோது, எதிரில் வந்த லாரி மீது பஸ் மோதி விபத்து ஏற்பட்டது. அப்போது என் காலில் அடிபட்டு விட்டது. எனக்கு சிகிச்சை கொடுத்த டாக்டர்கள் 6 மாதம் கட்டாயமாக ஓய்வெடுக்க வேண்டும் என்றார்கள். ஆனபோதும் நான் அந்த நிகழ்ச்சியில் நடனமாடினேன். அப்போது அந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக இருந்த நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், சங்கீதா ஆகியோர் என்னை என்கிரேஜ் செய்தபோதும், இந்த மாதிரி நேரத்தில் காலுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்று எனக்கு அன்பான அட்வைஸ் செய்தார்கள். அதன்காரணமாக என்னால் அந்த நிகழ்ச்சியில் பைனல் போக முடியவில்லை.
அதையடுத்து விஜய் டிவி ரமணன் சார், ப்ரவின் சார் ஆகியோர் என்னை கனா காணும் காலங்கள் தொடரில் ஜோதிகா என்ற கேரக்டரில் நடிக்க வைத்தனர். நான் செலக்ட் ஆவேன் என்று நினைக்கவே இல்லை. நான் ப்ரமோ பண்ணியதைப் பார்த்து ஓகே செய்து விட்டனர். அதனால் 7 மாதங்கள் அந்த தொடரில் நடித் தேன். அதை முடித்ததும் டைரக்டர் திருமுருகன் கார்த்திகை பெண்கள் தொடரில் ஷீலா என்ற கேரக்டரில் நடிக்க வைத்தார். அது எனக்கு பெரிய அங்கீகாரத்தைக் கொடுத்தது. அந்த தொடரில் எனக்கு நானே டப்பிங் பேசினேன். அந்த தொடரில் நடித்துக் கொண்டிருந்தபோது ஜீ தமிழில் அஞ்சறைப்பெட்டி, பாலிமர் டிவியில் இம்சை அரசர்கள் மற்றும் சுவையைத்தேடி உள்பட பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் செயல்பட்டேன்.
அதன்பிறகு பிரான்ஸ் சென்று டிகிரி முடித்தேன். பிரான்சில் படித்து வந்தபோது 2 வருடங்களாக 50 மாணவர்களுக்கு நடனம் கற்றுக்கொடுத்தேன். என்னிடம் 6 வயது முதல் 75 வயது வரையிலானவர்கள் நடனம் பயின்றனர். அவர்கள் அனைவரும் பிரான்சுக்காரர்கள்தான். கடந்த டிசம்பர் மாதம்தான் இந்தியா வந்தேன்.
அப்போது படித்த படிப்புக்கேற்ற வேலைக்கு செல்ல முடிவெடுத்தேன். ஆனால் நான் வேலைக்கு போன இடங்களில் நீங்கள் நல்ல டான்சர். எங்களையெல்லாம் சந்தோசப்படுத்தியிருக்கிறார்கள். அதனால் நீங்கள் தொடர்ந்து மீடியாவில்தான் இருக்க வேண்டும் என்று சிலர் சொன்னதை அடுத்து மறுபடியும் சின்னத்திரையில் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளேன். தற்போது சில நிறுவனங்களிடம் பேசிக்கொண்டிருக்கிறேன். மீண்டும் சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு, ஆங்கரிங் வாய்ப்பு என்று எது கிடைத்தாலும் செய்ய தயாராகி விட்டேன்.
இப்படி சொல்லும் நடிகை ஸ்வேதா, தற்போதைய சீரியல் நடிகைகளில் தேவிப்ரியா, நீலிமாராணி ஆகிய இருவரும் என்மீது அதிக அக்கறை கொண்டவர்கள். ஷோக்களுக்கு செல்லும்போது என்னை ஒரு குழந்தை மாதிரி கவனித்துக்கொள்வார்கள். இதில் தேவிப்பிரியா, நன்றாக படிக்க வேண்டும். பெரிய ஆளாக வேண்டும் என்று அட்வைஸ் கொடுப்பார்கள். நான் பாரிசில் இருந்தபோது வெயிட் போடாதே. நல்லா படி என்று எனக்கு மெசேஜ் அனுப்புவார். என்னை ரொம்பவே என்கரேஜ் பண்ணுவார்.
அந்த வகையில், தேவிப்பிரியா, நீலிமா ராணி ஆகிய இருவரின் நடிப்பும் எனக்கு மிகவும் பிடிக்கும், செல்லமே தொடரில் தேவிப்பிரியா நடித்த வேடமும், வாணி ராணியில் நீலிமா நடித்த வேடமும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். பர்சனல் லைபில் எனக்கும் அவர்கள் தெரியும் என்பதால், நடிப்பில் அவர்கள் எந்த அளவுக்கு தங்களை மாற்றிக்கொண்டு நடித்திருக்கிறார்கள் என்பதை என்னால் உணர முடிந்தது. இவர்களை தவிர தீபக், சஞ்சீவ், ராஜ்பரத் ஆகிய அண்ணன்களும் என்னை என்கரேஜ் பண்ணுவார்கள்.
-என்று கூறும் ஸ்வேதாவுக்கு நடனமாட வேண்டு, நடிக்க வேண்டும், வெளிநாட்டில் படிக்க வேண்டும் என்று இருந்து வந்த ஒவ்வொரு கனவும் எனக்கு இப்போது நனவாகி விட்டது. அதற்கு என்னோட பேமிலி சப்போட்டாக இருந் தார்கள். அந்த வகையில் என்னோட வளர்ச்சிக்கு பின்னால் எனது பேமிலியே உள்ளது என்று கூறும் ஸ்வேதா, அடுத்து, சின்னத்திரையில் தொடர்ந்து நடிப்பு, தொகுப்பாளினி என தனது பயணத்தை தொடரப்போகிறாராம்.