டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சின்னத்திரை தயாரிப்பாளர் சஙங்கத்தை தொடங்கி அதன் தலைவராக இருந்து வந்த ராதிகா கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் ராதிகா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். ராதிகாவின் ராஜினாமாவைத் தொடர்ந்து தற்போது சுஜாதா தலைவராக(பொறுப்பு) இருந்து வருகிறார். குஷ்புவுக்கும், அவருக்கும் கருத்து வேறுபாடு என்றும், நடிகர் சஙங்க தேர்தலின்போது தனக்கு ஆதரவாக யாரும் குரல் கொடுக்கவில்லை அதனால் தான் ராதிகா ராஜினாமா செய்தார் என்று கூறப்பட்டது.
இதுகுறித்து ராதிகா அளித்துள்ள விளக்கம் வருமாறு: தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை எனது சொந்த காரணங்களுக்காகத்தான் ராஜினாமா செய்தேன். ஆகஸ்ட் மாதம் என் மகள் ரேயான் திருமணம் நடக்க இருக்கிறது. அதற்கான வேலைகளில் பிசியாகிவிட்டேன். என் மகன் கிரிக்கெட்டில் ஆர்வமாக இருக்கிறான். அவனுக்கு தனி கவனம் செலுத்த வேண்டியது இருக்கிறது. படங்களிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறேன். இப்படி பல காரணங்களால் என்னால் சங்க பணிகளுக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. அதனால் தான் ராஜினாமா செய்தேன். என்றாலும், சங்கத்துக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கிக்கொண்டிருப்பேன். இதுதான் உண்மையான காரணம். இதுதவிர சொல்லப்படும் வேறு காரணங்கள் அனைத்தும் பொய் என்கிறார் ராதிகா.