ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
திருமுருகன் இயக்கிய நாதஸ்வரம் தொடரில் சின்னத்திரைக்கு வந்தவர் ஸ்ரித்திகா. அதையடுத்து உறவுகள் சங்கமம், வைதேகி, மாமியார் தேவை என சில தொடர்களில் நடித்தவர் இப்போது 'குலதெய்வம்' தொடரில் நடித்து வருகிறார். இப்படி தான் நடித்த எல்லா தொடர்களிலுமே பாசிட்டீவான வேடங்களில் நடித்ததால் குடும்பப் பெண்களின் மனதில் நிலையான இடத்தை பிடித்து விட்டேன் என்கிறார் ஸ்ருத்திகா.
இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், எல்லோரையும் போலவே எனக்கும் சினிமாவில் பிரபலமாக வேண்டும் என்பதுதான் ஆசையாக இருந்தது. அதனால் வெண்ணிலா கபடிக்குழு, வேங்கை உள்பட சில படங்களில் நடித்தேன். அதையடுத்து, கிளாமரான கதாநாயகி வேடங்கள் கிடைத்ததால் அப்படி நடிக்க விருப்பமில்லாமல் சின்னத்திரைக்கு வந்து விட்டேன். அந்த வகையில், நாதஸ்வரம் தொடரில் நான் நடித்த மலர் கேரக்டர் எனக்கு மிகப்பெரிய ரீச் கொடுத்தது. மலர் மலர் என்று தமிழ்நாட்டு குடும்பப் பெண்களின் உதடுகளால் உச்சரிக்கப்பட்டேன். அனுசரணையாக நடந்து கொள்ளும் பெண்ணின் வேடம் என்பதால் அந்த கேரக்டர் தமிழ்நாட்டு குடும்பப் பெண்களின் மனதில் எனக்கு இடம் பிடித்துக்கொடுத்தது. அதனால் பின்னர் சினிமாவில் எனக்கு ஆர்வம் இல்லாமல் போனது. என்றாலும் நான் எதிர்பார்க்கிற மாதிரி வாய்ப்புகள் வந்தால் சினிமாவிலும் நடிப்பேன்.
மேலும், இப்போது நடித்து வரும் குலதெய்வம் தொடரும் பெண்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. ஆக, டைரக்டர் திருமுருகனின் இரண்டு சீரியல்களுமே எனக்கு சின்னத்திரையில் நிலையான இடத்தை பிடித்துக்கொடுத்து விட்டது. அதனால் அடுத்தபடியாகவும் பாசிட்டிவான வேடங்களில் அதிகமாக நடிக்க ஆசைப்படுகிறேன். குறிப்பாக, புகுந்த வீட்டிற்கு வாழ வரும் பெண்கள் எந்தமாதிரி மற்றவர்களை அணுசரித்து, விட்டுக்கொடுத்து நடந்து கொள்ள வேண்டும் என்பதை வெளிப்படுத்தும் வேடங்களில் நடிக்க வேண்டும். இந்த மாதிரி வேடங்கள் பெண்களுக்கு அறிவுரையாகவும் இருக்கும். அதோடு, பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் வேடங்களில் நடிப்பதிலும் ஆர்வமாக இருக்கிறேன் என்று கூறும் ஸ்ரித்திகாவுக்கு, நெகடீவ் வேடங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையும் உள்ளதாம். ஆனால் அப்படி யாரிடமாவது அவர் சான்ஸ் கேட்டால், அதுக்கெல்லாம் நீ சரிப்பட்டு வரமாட்டே என்று சொல்லிவிடுகிறார்களாம்.