'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாகுபலி படத்தின் மூலம் உலக புகழ்பெற்ற இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி நிலமோசடி வழக்கில் சிக்கி உள்ளார். பிரபல தெலுங்குபடத் தயாரிப்பாளர் புவனேஸ்வர் என்பவர் ஆந்திர மாநிலம் ராம்பல்லி நீதிமன்றத்தில் ராஜமவுலி மீது நிலமோசடி வழக்கு தொடர்ந்துள்ளார் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
ஐதராபாத், பஞ்சாராஹில்ஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் கீழ் தளத்தில் உள்ள தனது வீட்டை ராஜமவுலி விற்க முன்வந்தார், அதனை நான் 42 லட்சம் ரூபாய்க்கு வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டு 2.7 லட்சம் முன் பணமாக கொடுத்தேன். அதன் பிறகுதான் அந்த வீடு சட்டவிரோதமாக கட்டப்பட்டு இருப்பதும், மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு இல்லை என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து ராஜமவுலியிடம் கேட்டபோது அவர் எதுவும் சொல்லாமல் வேறொருவருக்கு வீட்டை விற்று விட்டார். எனது பணத்தை மோசடி செய்துவிட்டார். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் இதுகுறித்து ராஜமவுலி வருகிற 24ந் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. அதோடு ராஜமவுலி நேரில் ஆஜராகவும் சம்மன் அனுப்பியது.