Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

நல்ல கேரக்டர் வந்தால் நடிப்பேன் - செய்தி வாசிப்பாளர் கிறிஸ்டோபர் பேட்டி

28 டிச, 2015 - 14:35 IST
எழுத்தின் அளவு:
If-good-character-offer-i-will-act-says-newsreader-Christopher

வசந்த் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருப்பவர் கிறிஸ்டோபர். அது மட்டுமின்றி, நேருக்கு நேர் பேசுவோம், நிகழ்ச்சி தொகுப்பு, நேரலை நிகழ்ச்சி, கருத்தரங்கம் என பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் பன்முகக்கலைஞன் இவர். தினமலர் இணையதளத்திற்காக அவரை பேட்டி கண்டபோது, அவர் நமக்களித்த பதில்கள் இங்கே இடம்பெறுகிறது...


உங்களது சேனல் என்ட்ரி பற்றி சொல்லுங்கள்...?


நான் கல்லூரியில் படித்து வந்தபோது எனது நண்பர் செல்வகுமார் என்பவர் லோக்கல் சேனலில் செய்தி வாசித்து வந்தார். அதைப்பார்த்து எனக்கும் அதில் ஆர்வம் ஏற்பட்டது. அதனால் லோக்கல் சேனலில் செய்தி வாசிக்க ஆரம்பித்தேன். அதையடுத்து 2008ல் இருந்து வசந்தி டிவியில் செய்தி வாசிக்கத் தொடங்கினேன். எனக்கு அங்கு நல்ல சுதந்திரம் கொடுக்கிறார்கள். அதனால் செய்தி வாசிப்பாளரான நான், பிரபலங்களை பேட்டி காண்பது. நிகழ்ச்சி தொகுத்து வழங்குவது, லைவ் ஷோ நடத்துவது என பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறேன்.


லைவ் ஷோக்களில் பிரபலங்களிடம் பேசும்போது, இந்த அளவுக்குத்தான் பேச வேண்டும் என்கிற வரையறை உள்ளதா? இல்லை அப்போதைய அரசியல் சூழல் குறித்து அனைத்து விசயங்களையும் சுதந்திரமாக பேசுவீர்களா?


அனைத்து விசயங்களையும் பேசுவதற்கான சுதந்திரம் உள்ளது. என்றாலும், நான் ஒரு வரையறைக்குள்தான் பேசுகிறேன். பெரும்பாலும் லைவ் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விஐபிக்களை தர்மசங்கடத்திற்குள் தள்ளும் வகையில் பேசுவதில்லை. குறிப்பாக தனிப்பட்ட ஒரு நபரிடம் அவர்களின் மனசு நோகும் அளவுக்கு ஒருபோதும் பேசுவதில்லை. ஒரு நிகழ்ச்சியில், காங்கிரஸ், பிஜேபி. அதிமுக, திமுக என நான்கு கட்சியினர் பங்கேற்பார்கள் என்றால் அவர்கள் நான்கு பேருக்குமே சம அளவு பேசுவதற்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. வேண்டப்பட்ட கட்சி, வேண்டப்படாத கட்சி என்கிற மனப்பான்மையை அந்த இடத்தில் காட்டுவதில்லை.




நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் அரசியல் கட்சியினரிடம் இந்த மாதிரியான டாப்பிக் பற்றிதான் பேசப்போகிறோம் என்பதே முன்பே சொல்லித்தான் அழைப்பீர்களா? அதேபோல், அவர்கள்தரப்பில் இந்த அளவுக்குதான் கேள்விகள் கேட்க வேண்டும் என்கிற டிமான்ட் வைத்து விட்டு வருகிறார்களா?


இந்த விசயம் சம்பந்தமாகத்தான் பேசப்போகிறோம் என்பதை முன்பே சொல்லி விடுவோம். மற்றபடி இதுவரை எங்களிடம் யாரும் இந்த அளவுக்குத்தான் கேட்க வேண்டும் என்று டிமான்ட் வைத்ததில்லை. பேசப்போகும் விசயம் குறித்து தங்களது கருத்துக்களை பேசுகிறார்கள். அதேசமயம் விவாதத்தின்போது முடிந்தவரை அவர்கள் வார்த்தைகளால் மோதிக்கொள்ளாதவாறு அந்த நிகழ்ச்சியை சுமூகமாக நடத்துகிறோம். சில சமயங்களில் அவர்கள் கடுமையாக பேசிக்கொண்டேயிருந்தால் வேறு வழியில்லாமல் பிரேக் கொடுத்து அந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறோம்.




நியூஸ் வாசிப்பதில் என்னென்ன சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது?


வசந்த் டிவியைப்பொறுத்தவரை ஆரம்பத்தில் இருந்தே செய்திகளை ரெக்கார்டிங் செய்து கொடுப்பதில்லை. லைவ்வாகத்தான் கொடுக்கிறோம். செய்தி வாசித்துக்கொண்டிருக்கும்போதே ஏதேனும் முக்கியமான செய்திகள் வந்தால் உடனே அதை வாசித்து விடுவோம். இந்த விசயத்தில் ஆரம்பத்தில் கொஞ்சம் பதட்டமாக தெரியும். ஆனால் போகப்போக பழகி விடும். அந்த வகையில், பிரச்சினை என்று எதுவும் இல்லை. மேலும், ரெக்கார்டிங்கில் உடனடி செய்திகளை கொடுக்கிற அட்வான்டேஜ் இல்லை. ஆனால் லைவ்வில் அது இருக்கிறது.




சின்னத்திரை பிரபலங்கள் பலர் சினிமாவுக்கு வருகிறார்களே. நீங்கள் எப்படி?


சினிமாவில் பெரிய ஆர்வம் என்பது இல்லை. ஆனால் யாராவது நண்பர்கள் அழைத்தால் சினிமாவிற்கு வருவேன். அதெல்லாம் என்னோட சின்னச்சின்ன ஆசைகள்தான். சினிமாவிலேயே முழுநேரமும் இருக்க வேண்டும் என்பது மாதிரியான பெரிய ஆசைகள் எல்லாம் இல்லை. ஏதாவது கேரக்டர்கள் கொடுத்தால் நடிக்கலாம்.


மேலும், சதுரங்க வேட்டை என்ற படத்தில் செய்தி படிப்பது போன்று ஒரு ஷாட்டில் நடித்தேன். அதனால் ஜாலியான, ப்ரண்ட்லியான, ஜனரஞ்சகமான கேரக்டர்கள் வந்தால் நடிப்பேன். குறிப்பாக மக்கள் எதிர்ப்பது மாதிரி இலலாமல் அவர்கள் ரசிக்கிற மாதிரியான வேடங்கள் வந்தால் நடிப்பேன் என்கிறார் கிறிஸ்டோபர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், அருந்ததி'' : டிவியில் இன்றைய திரைப்படங்கள் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in