வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
தேவயானி நடித்த கோலங்கள் தொடரில் ஒரு முக்கியமான நெகடீவ் ரோலில் நடித்தவர் சந்திரா லட்சுமண். அதையடுத்து பல தொடர்களில் நடித்த அவர் தற்போது பாசமலர் தொடரில் நடித்து வருகிறார். மேலும், அவரது பேச்சில் மலையாள வாடை அடிப்பதால் சின்னத்திரை வட்டாரங்களில் அவரை மலையாள நடிகை என்றே நினைத்துக்கொள்கிறார்கள்.
இதுபற்றி சந்திரா கூறும்போது, நான் மலையாள சினிமாவில் 6 படங்களில் நடித்து விட்டுத்தான் தமிழுக்கு வந்தேன். ஸ்ரீகாந்த்-திரிஷா நடித்த மனசெல்லாம் என்ற படத்தில் தங்கை வேடத்தில் நடித்தேன். அதன்பிறகு திருச்செல்வம் இயக்கிய கோலங்கள் தொடரில் நடித்தேன். பின்னர் தமிழ், தெலுங்கு என பல சீரியல்களில் பிசியாகி விட்டேன். மேலும், என்னுடன் நடிப்பவர்கள் அனைவருமே எனது தமிழில் மலையாளம் வாடை இருப்பதால் என்னை மலையாளி என்றே நினைத்துக்கொள்கிறார்கள். சிலர் என்னிடம்கூட நீங்கள் மலையாளியா என்கிறார்கள்.
ஆனால், நிஜத்தில் நான் மலையாளி அல்ல. பாலக்காட்டு அய்யர் பெண் நான். எங்கள் வீட்டில்கூட அனைவருமே தமிழில்தான் பேசுவோம். சீரியல்களில் தமிழில் இருக்கும் டயலாக் பேப்பரைகூட படித்துதான் நடிக்கிறேன் என்று கூறும் சந்திரா லட்சுமண், நான் பிறந்து வளர்ந்தது என்னவோ பாலக்காடாக இருந்தாலும், பல ஆண்டுகளாக சென்னைவாசியாகி விட்டேன். ஆக, இப்போது நான் சென்னை தமிழச்சி என்கிறார்.