தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பெரிய திரையில் அறிமுகமாகி இப்போது சின்னத்திரையில் கலக்கி கொண்டிருப்பவர் நளினி. சின்ன பாப்பா பெரிய பாப்பா நகைச்சுவை தொடரில் நடித்து வருகிறார். இதுதவிர தற்போது தெலுங்கில் இரண்டு தொடர்களில் நடித்து வருகிறார். இதற்காக மாதத்தில் 25 நாட்கள் ஐதராபாத்திலும், 5 நாட்கள் சின்ன பாப்பா பெரிய பாப்பாவுக்காகவும் சென்னையிலும் இருந்து நடித்து வருகிறார்.
நடிகையாக ஏற்கெனவே தெலுங்கு மக்களுக்கு அறிமுகமான நளினிக்கு ஏற்கெனவே தெலுங்கு சீரியல் வாய்ப்புகள் பல வந்தது. ஆனால் குடும்ப பணிகள் காரணமாக ஒப்புக் கொள்ளாமல் இருந்தார். தற்போது பிள்ளைகள் செட்டிலாகிவிட்டதால் குடும்ப பணிகளிலிருந்து விடுபட்டுவிட்டதால் ஒப்புக் கொண்டு நடித்து வருகிறார். அம்மா நா கூடாலா தொடரில் நடித்தவர் இப்போது மேலும் ஒரு சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். தமிழ், தெலுங்கு இரண்டிலும் பிசியாகிவிட்டதால்தான் தென்னிந்திய சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது. தெலுங்கு நளினியின் தாய்மொழி என்பது குறிப்பிடத்தக்கது.