ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பொதுவாக தீபாவளி பண்டிகைக்கு தொலைக்காட்சி சேனல்களில் புதிய படங்களை ஒளிபரப்புவார்கள். அதிலும் குறிப்பாக ஹிட்டான பெரிய ஹீரோக்களின் படங்களை. அந்த வகையில் வருகிற தீபாவளிக்கு மாரி, தனி ஒருவன், இன்று நேற்று நாளை, மீகாமன் போன்ற படங்கள் ஒளிபரப்பாகிறது.
இந்த ஆண்டு தீபாவளிக்கு முன்பே விடுமுறை நாட்களில் புதிய படங்களை சேனல்கள் ஒளிபரப்புகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கமல் நடித்த உத்தம வில்லன், அருள்நிதி நடித்த டிமாண்டி காலனி ஆகியவை ஒளிபரப்பானது. இரண்டு படங்களுமே மிகச் சமீபத்தில் வெளிவந்தவை. தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் இரண்டு புத்தம் புதிய படங்கள் ஒளிபரப்பானது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சேனல் வட்டாரத்தில் விசாரித்த போது கிடைத்த தகவல்: புதுப்படங்களை ஒளிபரப்ப ஆதாரமாக இருப்பது அதில் ஒளிபரப்பாகும் விளம்பரங்கள்தான். ஆனால் தீபாவளியன்று ஒளிபரப்பாகும் படங்களில் விளம்பரம் செய்ய வியாபார நிறுவனங்கள் தயக்கம் காட்டுகிறது. தீபாவளிக்கு மக்கள் தங்களிடம் பொருட்கள் வாங்க வேண்டும் என்றுதான் வியாபார நிறுவனங்கள் விளம்பரம் செய்கின்றன. மக்களிடம் புழங்கும் தீபாவளி போனஸ் பணத்தை குறிவைத்துதான் வீட்டு உபயோக பொருளில் இருந்து வாகனங்கள் வரை விளம்பரம் செய்கின்றன.
தீபாவளிக்கு புதிய படங்கள் ஒளிபரப்பாகும்போது அதில் விளம்பரம் செய்வதால் பெரிய பலன் இல்லை. காரணம் மக்கள் தீபாவளி பர்சேசிங்கை முன்பே முடித்திருப்பார்கள். எனவே வியாபார நிறுவனங்கள் தீபாவளிக்கு முன்னதாக விளம்பரம் செய்ய விரும்புவதால் தீபாவளிக்கு முந்தைய சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் புதிய படங்களை ஒளிபரப்புகிறார்கள். வருகிற சனி மற்றும் ஞாயிறிலும் புத்தம் புதிய படங்கள் ஒளிபரப்பாகும். என்கிறார்கள்.