'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தீபாவளி அன்று இந்தியத்தொலைக்காட்சியில் முதல்முறையாக விஜய் டிவியில் மாரி படம் ஒளிபரப்பாகவிருக்கிறது. இந்த ஒளிபரப்புக்குப் பின்னால் உள்ள கதை எத்தனை பேருக்குத்தெரியும்? தெரிந்து கொள்ளுங்கள்... ராதிகா சரத்குமார் தயாரிப்பில் உருவான மாரி படத்தை லைன் புரட்யூஸராக தன்னுடைய வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தயாரித்துக் கொடுத்தார் தனுஷ். படத்தை எடுப்பதற்கான பணத்தை பேசியபடி கொடுத்தார் ராதிகா. அதனால் திட்டமிட்டபடி படத்தை முடித்துவிட்டார் தனுஷ். ஆனால் தனுஷுக்குக் கொடுக்க வேண்டிய சம்பளத்தை மட்டும் ராதிகாவினால் பேசியபடி கொடுக்க முடியவில்லை. எனவே மாரி படத்தை ராதிகாவினால் வெளியிட முடியாதபடி, படத்தின் போஸ்ட்புரடக்ஷன்ஸ் வேலைகளை முடிக்காமல் பாக்கி வைத்தார் தனுஷ்.
அதன் காரணமாக மாரி படத்தின் ரிலீஸ் தேதி தாமதமாகிக்கொண்டே இருந்தது. இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க, சில முக்கியஸ்தர்களை வைத்து தனுஷ் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார் ராதிகா. கடைசியில் நடைபெற்ற பஞ்சாயத்தில், தனுஷுக்குக் கொடுக்க வேண்டிய சம்பளத்துக்கு ஈடாக மாரி படத்தின் சாட்டிலைட் உரிமயை எழுதிக்கொடுத்தார் ராதிகா. அதன் பிறகே மாரி படம் வெளியானது.
மாரி வெளியாகி பல மாதங்களாகியும் தன் வசமிருந்த மாரியின் சாட்டிலைட் ரைட்ஸை விற்கமுடியாமல் தவித்து வந்தார் தனுஷ். இந்நிலையில் சமீபத்தில்தான் விஜய் டிவியிடம் மாரி சாட்டிலைட் விற்றிருக்கிறார். பெரும் தொகை கொடுத்து மாரியை வாங்கிய விஜய் டிவியோ சுடச்சுட தீபாவளிக்கு விருந்து வைக்க இருக்கிறது.