விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த 'பாகுபலி' திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 700 கோடி ரூபாய் வரை வசூல் செய்து மிகப் பெரிய சாதனையைப் படைத்தது. தமிழ், தெலுங்கு மொழிகளில் நேரடியாகவும், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும் வெளியானது. கடந்த மாதத்தில் மலையாளம், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் டிவிக்களில் 'பாகுபலி' படம் ஒளிபரப்பப்பட்டது. அக்டோபர் 4ம் தேதி மலையாள சேனல் ஒன்றிலும், அக்டோபர் 24ம் தேதி தெலுங்கு சேனல் ஒன்றிலும், அக்டோபர் 25ம் தேதி ஹிந்தி சேனல் ஒன்றிலும், ஒளிபரப்பானது. மலையாள, ஹிந்தி டிவி சேனல்களில் ஒளிபரப்பு செய்யப்பட்டதற்கு கிடைத்த வரவேற்பை விட தெலுங்கில் ஒளிபரப்பான போது மிகப் பெரிய வரவேற்பை இந்தப் படம் பெறும் என்று எதிர்பார்த்தனர்.
ஆனால், சின்னத் திரையில் 'பாகுபலி' தெலுங்குப் படத்தின் ஒளிபரப்பு மிகப் பெரும் சாதனையை நிகழ்த்தத் தவறிவிட்டது. டிஆர்பி அடிப்படையில் இதுவரை டிவிக்களில் ஒளிபரப்பான தெலுங்குப் படங்களில் 'பாகுபலி' படம் நான்காவது இடத்தையே பிடித்துள்ளது. இன்னும் சொல்லப் போனால் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த 'மகதீரா' படத்தை விட 'பாகுபலி' படத்தின் டிஆர்பி ரேட்டிங் குறைவாகவே இருந்துள்ளது. 'பாகுபலி' படத்திற்கு 21.8 மட்டுமே டிஆர்பி ரேட்டிங்காகக் கிடைத்துள்ளது. ஆனால், 'மகதீரா' படம் 22 டிஆர்பிக்களைப் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளது. தெலுங்கு சேனல்களில் இதுவரை ஒளிபரப்பான தெலுங்குப் படங்களில் 'டெம்பர்' படம் 26.5 டிஆர்பியும், 'கப்பார் சிங்' படம் 24 டிஆர்பியும் பெற்று முதலிரண்டு இடங்களைப் பிடித்துள்ளன.
'பாகுபலி' படம் டிவியில் ஒளிபரப்பான போது அதிகப்படியான விளம்பரங்களைப் போட்டு பார்வையாளர்களை வெறுப்படைய வைத்ததுதான் படத்தின் டிஆர்பி குறையக் காரணம் என்கிறார்கள்.