பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சின்னத்திரைகளில் என்ட்ரியான 3 வருடங்களில் 20 சீரியல்களுக்கு மேல் நடித்து விட்டவர் ஷாமிலி. பாசிட்டீவ், நெகடீவ் என சீரியலுக்கு சீரியல் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடித்து வரும் ஷாமிலி, மாதம் 30 நாட்களும் நான் சீரியல்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறேன் என்கிறார்.
தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...
தென்றல் சீரியலில் சுஜிங்கிற கேரக்டர்ல வில்லியாதான் நான் முதல்ல சீரியலுக்கு அறிமுகமானேன். அந்த சீரியல் பெரிய அளவில் ரீச் ஆனதால், ஒரே சீரியலில் பிரபலமாகி விட்டேன். எங்க வீட்ல யாரும் சீரியல் பார்க்க மாட்டாங்க. அதனால் எனக்கு முதல்ல அந்த வில்லி வேடத்தோட ரெஸ்பான்ஸ் தெரியல. ஆனா நான் ரோட்டுல நடந்து போகும்போது சுஜி போறா பாருங்க என்று சிலர் பெண்கள் கூறினர். இன்னும் சிலர் என்னை திட்டவும் செய்தனர். இதனால் நான் பயந்து விட்டேன். அதையடுத்து டைரக்டரிடம் என்னை பார்க்கிற லேடீஸ்ங்க திட்டுறாங்க சார் என்றேன். அதற்கு, இப்பதான் முதன்முதலா வில்லியாக நடிச்சிருக்கீங்க. போகப்போக இது பழகிடும் என்றார். அதுக்கு அப்புறம் உதிரிப்பூக்கள் அதுவும் செகண்ட் லீடுதான். ரொம்ப நல்ல வேடம். மேகா என்ற அந்த கேரக்டர் சிறந்த நடிகைக்கான விருதினை எனக்கு வாங்கித்தந்தது.
அப்புறம் பைரவியில் நடிச்சேன். இப்ப பாசமலர், மாகாபாரதம், ரோமாபுரி பாண்டியன், 63 நாயன்மார்கள். வள்ளி, பிரியசகின்னு நிறைய சீரியல் பண்றேன். பிரியசகியில செகண்ட் லீடு கேரக்டர். ஹீரோயினிக்கு ப்ரண்டா வந்து அப்புறம் அவருக்கு எதிர்ப்பா மாறும் நெகடீவ் வேடம். ஒரு பாசிட்டீவா இருந்து நெகடீவா ஹீரோயினோட லவ்வருக்காக மாறும் இந்த வேடம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.
அவரிடத்தில், இதுவரை நடித்ததில் அதிக என்சாய் பண்ணி நடித்த வேடம் எது? என்று கேட்டபோது,
பாசமலர் சீரியலில் நடித்த பேய் வேடத்தில்தான் என்சாய் பண்ணி நடித்தேன். கதைப்படி பேய் என் உடம்புக்குள் போயிடும். எனக்குன்னு ஒரு கேரக்டர் உருவாக்கி என்னைச்சுற்றியை கதை செல்வது போல் இருந்த அந்த கேரக்டரை அனுபவித்து நடித்தேன். மேலும் எப்போதுமே நான் டைரக்டர்கள் சொல்வதை மட்டுமே செய்யக்கூடிய மிஷின் மாதிரி இல்லாமல் நானும் அந்த கேரக்டருக்கு தேவையான கொஞ்சம் விசயங்களை சேர்த்துதான் நடிப்பேன். அந்த வகையில் அந்தந்த கதாபாத்திரங்களாக என்னை முழுமையாக மாற்றிக்கொள்வேன்.
பேய் இருக்கிறதா? எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா?
என்னைப் பொறுத்தவரை கடவுள் என்ற ஒன்று இருந்தால் பேய் என்ற ஒன்றும் இருக்கும். காரணம் பாசிட்டீவ் ஒன்று இருந்தால் நெகடீவ் கண்டிப்பாக இருந்தாக வேண்டும். மேலும், எனக்கு பேய்க்கு பெரிதாக பயம் கிடையாது. ஆனால் ஒருமுறை மகாபாரதம் சீரியல் படப்பிடிப்புக்காக கார் ஓட்டிக்கொண்டு பெங்களூர் ஹைவேயில போய்க்கிட்டிருக்கும்போது ஒரு ஆள் நிற்பதுபோல் இருந்தது. ஆனால் பக்கத்துல போனபோது அதை காணவில்லை. நான் பயந்துட்டு காரை நிறுத்தி விட்டு ஒரு நிமிடம் சாமியை கும்பிட்டு விட்டு காரை வேகமாக எடுத்து சென்றேன். அதுக்கு அப்புறம் நான் தனியாக லாங் டிரைவிங் போறதில்லை. அந்த பேய நெனச்சு இப்ப வரை பயந்துக்கிட்டிருக்கேன்.
சினிமா வாய்ப்புகள் வருகிறதா?
ஸ்ரீகாந்த் நடித்த ஓம் சாந்தி ஓம் படத்தில் நடித்தேன். ஜூனியர் பாலையா பேத்தியாக நடித்துள்ளேன். எனக்கு ஒரு பாடல்கூட உள்ளது. அடுத்து ஜி.வி.பிரகாஷ் நடித்த பென்சில் படத்திலும் நடித்தேன். அதுவும் ஒரு நல்ல கேரக்டர். இந்த ரெண்டு படத்திலும் எனக்கு நல்ல பெயர் கிடைத்தால் அப்புறம் சினிமாவை தொடருவேன். பெருசா பேர் கிடைக்கலேன்னா சீரியலே பெட்டருன்னு ஒதுங்கிடுவேன்.
மேலும், சினிமாவில் ஒர்க் கம்மி. ஆனால் சீரியலில் காலை 9 மணிக்கு ஆரம்பித்தால் இரவு 9 மணி வரை ஷீட்டிங் போய்க்கிட்டேயிருக்கும். சினிமாவை விட சீரியலில்தான் நடிப்பதற்கான வாய்ப்பு அதிகமாக கிடைக்குது. மேலும் சினிமா ஒரு பத்துல நாள்ல முடிஞ்சிடும். ஆனா சீரியல் மாசம் 30 நாளும் ஒர்க் இருந்துக்கிட்டேயிருக்கும். அதோடு, டிவி நடிகைங்க சினிமாவில் பெருசாக வந்த மாதிரி தெரியல. அதனால் எனக்கு சினிமா ஆசை பெருசாக இல்லை.
மேலும், நான் சிட்டியில் மாடர்ன் கல்ச்சரில் வளர்ந்து பொண்ணு. ஆனா எனக்கு கிராமத்து கதாபாத்திரங்களில் நடிப்பதுதான் ரொம்ப பிடிக்கும். நான் மெயினா பண்ணின ரெண்டு சீரியல்களிலும் பாவாடை தாவணி அணிந்துதான் நடித்தேன். என்னை நானே ரொம்ப ரசித்தேன். நான் எந்த நடிகர் நடிகைக்கும் ரசிகை கிடையாது. அவர்கள் நடிக்கும் கேரக்டர் பிடித்திருந்தால் ரசிப்பேன். எனக்கு பிடித்த நடிகருன்னு சொல்லனும்னா தனுஷ்தான். அவருக்கு கொடுத்த ரோலை அழகாக பண்ணுவார்.
சினிமாவில் பாடல் காட்சிகளில் கிளாமர் பண்ணுவீங்களா?
கண்டிப்பாக பண்ண மாட்டேன். எனக்கு சினிமாவில் பிடிக்காத விசயமே கிளாமர்தான். சீரியலில் தொடாமல் நடிக்க வைப்பார்கள். டீசன்டா இருக்கும். அதனால்தான் நான் சீரியலை செலக்ட் பண்ணினேன். அதனால் சீரியல் மாதிரிடீசன்டான வேடங்கள் சினிமாவில் கிடைத்தால் மட்டுமே நடிப்பேன். ஹீரோக்களை தொட்டு நடிக்கும் வேடங்களை தவிர்த்து விடுவேன். அதேசமயம், சீரியலில் யாராவது கொஞ்சம் கிளாமராக டிரஸ் பண்ணியிருந்தாலும் கமபெனியில் இருந்து போன் வந்து விடும். அவங்க என்ன அப்படி டிரஸ் பண்ணிருக்காங்க என்பார்கள். அந்த அளவுக்கு சீரியல்களில் குடும்பப் பாங்காக மட்டுமே நடிக்க வைக்கிறார்கள். எனக்கு இதுதான் பிடிச்சிருக்கு. அதனால் சீரியல்களில் டீசன்டான நல்ல கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிக்கவே ஆசைப்படுகிறேன்.
மேலும், நான் சீரியலில் நடிக்க ஆரம்பிச்சு 3 வருடமாச்சு அதற்குள் 20 சீரியல்களில் நடித்து விட்டேன். இங்கே ரொம்ப டீசன்டா பிகேவ் பண்றாங்க. பாதுகாப்பா இருக்கு. அதனால் சினிமாவைவிட நான் சீரியல்களுக்கே முக்கியத்துவம் கொடுப்பேன் என்கிறார் ஷாம்லி.