தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பெப்ஸி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் பெப்ஸி உமா. சுமார் பத்து ஆண்டுகளாக அந்த நிகழ்ச்சியை வழங்கி வந்தார். அவரது இயல்பான தமிழும், பேச்சும் பெருவாரியான ரசிகர்களை கவர்ந்தது. அந்த வகையில், ஒரே நிகழ்ச்சியை பத்து ஆண்டுகளாக சிறப்பாக நடத்திய பெருமை பெப்ஸி உமா ஒருவரையே சாரும்.
அந்த வகையில், அவருக்கு பிறகு வந்த பெரும்பாலான டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினிகள் அவரைத்தான் ரோல் மாடலாக எடுத்துக்கொண்டனர். அந்த வரிசையில், தற்போது வளர்ந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சி தொகுப்பாளினி விஜயலட்சுமியும் ஒருவர். இவர் எனது ரோல் மாடல் பெப்ஸி உமாதான் என்கிறார். அவரால் அதிக ஈர்க்கப்பட்ட நான், தொகுத்து வழங்கும்போது அவரது சாயல் என்னிடம் வெளிப்படுவதாக சக தொகுப்பாளினிகள் சொல்கிறார்கள். அந்த அளவுக்கு பெப்ஸி உமாவை நான் ரசித்திருக்கிறேன் என்கிறார்.
மேலும், தனது சேனல் என்ட்ரி குறித்து விஜயலட்சுமி கூறுகையில், சத்யம் டிவியில் உலகம் உங்கள் பார்வைக்கு என்ற நிகழ்ச்சியில்தான் நான் ஆங்கராக அறிமுகமானேன். உலகமெங்கிலும் ஒவ்வொரு நாளும் நடக்கும் தகவல்களை சேகரித்து வழங்குவது. அந்த நிகழ்ச்சியை நானே இயக்கவும் செய்தேன். அதன்பிறகு இமயம் டிவிக்கு சென்றேன். காவியப்பார்வை, காலச்சுவடுகள் என்ற இரண்டு நிகழ்ச்சிகள் மற்றும் பொதிகையில் குக்கரிங் ஷோ பண்ணியிருக்கேன். இப்போது எஸ் டிவியில் காம்பயராக இருக்கிறேன்.
பெப்ஸி உமாவின் ஸ்டைலை பின்பற்றுவதால் நான் ஆங்கரிங் செய்வது பலருக்கு பிடிக்கிறது. அதனால் நான் எங்கு சென்று சான்ஸ் கேட்டாலும் உடனே தந்து விடுகிறார்கள் என்று கூறும் விஜயலட்சுமி அடுத்தபடியாக முன்னணியில் இருக்கும் சில சேனல்களில் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாக சொல்கிறார்.
மேலும், தணல், ஒரு கணம், தீதும் நன்றும் ஆகிய குறும்படங்களில் நடித்திருக்கும் விஜயலட்சுமி, ஒரு படத்தில் இரண்டாவது நாயகியாக நடிப்பதற்கும் பேசிக்கொண்டிருக்கிறாராம். எதிர்காலத்தில் சினிமா-சின்னத்திரை என இரண்டு மீடியாக்களிலும் புகழ் பெற வேண்டும் என்பதுதான் அவரது எதிர்கால திட்டமாம்.