‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
தெலுங்கு திரை உலகில் வளர்ந்து வரும் நடிகரான மஞ்சு விஷ்ணு திரைப்படங்கள் மட்டுமல்லாது தனது நேரங்களை சமூக சேவைகளிலும் செலவிடுகிறார். பள்ளிக்கூடங்களில் மாணவிகளுக்கு தனி கழிவறை கட்டிக் கொடுப்பது கிராமங்களை தத்தெடுத்து முன்னேற்ற பாதையில் அவற்றை கொண்டு செல்வது போன்ற பணிகளிலும் மஞ்சு விஷ்ணு ஈடுபட்டுள்ளார். மஞ்சு விஷ்ணு தனது சொந்த மாவட்டமான சித்தூரில் உள்ள சந்திரகிரி மண்டலத்தைச் சேர்ந்த 10 கிராமங்களை தத்தெடுத்துள்ளார். நடிகர் மஞ்சு விஷ்ணு படப்பிடிப்பு நடைபெற்ற பூங்காவில் நாய்கள் மற்றும் பறவைகளை பலர் தாக்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். சிறிதும் தாமதிக்காமல் அவ்விடம் சென்று நாய்களை தாக்கியவர்களை கண்டித்துள்ளார். மேலும் காயமடைந்த நாய்களுக்கு முதலுதவி செய்ய ஏற்பாடும் செய்துள்ளார்.இதனை அறிந்த ரசிகர்கள் மஞ்சு விஷ்ணுவிற்கு பாராட்டுக்களை தெர்வித்து வருகின்றனர். நடிகர் மஞ்சு விஷ்ணு தற்போது இயக்குனர் கார்த்திக் ரெட்டி இயக்கும் படத்தில் நாயகனாக நடித்து வருகின்றார். இப்படத்தில் நயாகியாக நடிகை சோனாரிக்கா நடிக்கின்றார்.