இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
மோகன்ராஜா இயக்கத்தில் ஜெயம்ரவி-நயன்தாரா-அரவிந்த்சாமி நடிப்பில் வெளியான படம் தனி ஒருவன். தமிழில் சூப்பர் ஹிட்டான இந்த படத்தை இந்தி, தெலுங்கில் ரீமேக் செய்யும் வேலைகள் தொடங்கி விட்டது. அந்த வகையில், தெலுங்கில் இப்படத்தின் நாயகனாக ராம்சரணும், வில்லனாக ராணா அல்லது நாகார்ஜூனா இருவரில் ஒருவரை நடிக்க வைக்கும் முயற்சி நடந்து கொண்டிருந்தது. ஆனால், நாகார்ஜூனா, ராணா இருவருமே வில்லனாக நடிக்க மறுத்து விட்டார்களாம். பாகுபலியில் வில்லனாக நடிக்கும் ராணா அதை காரணம் காட்டி இந்த படத்தை தவிர்த்து விட்டநிலையில், நாகார்ஜுனாவோ ஹீரோ மார்க்கெட் நன்றாக போய்க்கொண்டிருக்கும்போது எதற்காக வில்லனாக நடிக்க வேண்டும் என்று தவிர்த்து விட்டாராம்.
அதனால் அடுத்தகட்ட முயற்சியாக இப்போது அலைபாயுதே மாதவனிடம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர் இன்னமும் முடிவு சொல்லாதபோதும் கண்டிப்பாக நடிப்பார் என்று எதிர்பார்க்கிறார்களாம். காரணம், தமிழில் தனிஒருவன் படத்தின் கதையை ரெடி பண்ணிட்டு அரவிந்த்சாமி நடித்த வில்லன் வேடத்தில் நடிக்க முதலில் மாதவனைத்தான் டைரக்டர் மோகன்ராஜா கேட்டுக்கொண்டாராம். கதையைக்கேட்ட அவருக்கு பிடித்து விட்டபோதும், இந்தி படங்களில் பிசியாக இருந்ததால் அவரால் முடியாமல் போய் விட்டதாம். அதனால்பிறகுதான் அரவிந்த்சாமியை கமிட் பண்ணியிருக்கிறார்கள். அதனால் மாதவனின் முடிவு தங்களுக்கு சாதகமாகவே இருக்கும் என்று தனி ஒருவன் தெலுங்கு ரீமேக் வேலைகளை தொடங்கி விட்டார்களாம்.