சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா |
மோகன்லாலின் மகன் ப்ரணவ் மோகன்லாலை ஹீரோவாக்காமல் விடமாட்டார்கள் போல தெரிகிறதே.. தனக்கு நடிப்பில் இன்ட்ரெஸ்ட் இல்லை, டைரக்சனில் தான் ஆர்வம் என்று அவரும் சொல்லிச்சொல்லி தவித்துப்போனார்., மகனின் ஆர்வம் டைரக்சனில் தான் என்பது தெரிந்ததும் மறுப்பேதும் சொல்லாமல், மகனே உன் சமத்து ஓகே சொன்ன மோகன்லால், தனக்கு 'த்ரிஷ்யம்' மூலம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த இயக்குனர் ஜித்து ஜோசப்பிடமே தொழில் கற்றுக்கொள்ள சொல்லிவிட்டார்.. 'த்ரிஷ்யம்' தமிழ் ரீமேக்கான 'பாபநாசம், திலீப் நடித்துள்ள 'லைப் ஆப் ஜோஸுட்டி' என இரண்டு படங்களில் ஜீத்துவிடம் வேலைபார்த்து முடித்துவிட்டார் ப்ரணவ்.
ஆனாலும் நடிகர் திலீப் சமீபத்தில் டிவி சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், “ப்ரணவ் தன்னுள்ளே நிறைய திறமைகளை வைத்துள்ளார். ஷூட்டிங்ஸ்பாட்டில் எந்த தரப்பினரும் அவரிடம் உதவி கேட்டால் உடனடியாக செய்துகொடுக்கும் அளவுக்கு விஷயம் தெரிந்தவர்.. அதைவிட நடிகனுக்கான சகல அம்சமும் அவரிடம் இருக்கிறது.. ஒருவேளை அவருக்கு நடிக்கும் ஆசை எதுவும் இருந்தால், அதற்கு இதுதான் சரியான நேரம்” என கூறியுள்ளார். அதேபோல அவரது குருநாதர் ஜீத்து ஜோசப்பும், ப்ரணவ் தனியாக படம் இயக்கும் அளவுக்கு தயாராகிவிட்டார்.. அவரது திறமைக்கு மிகச்சிறந்த படங்களை தருவார் என்பதில் சந்தேகமில்லை என சர்டிபிகேட் வழங்கிவிட்டார்.. ஆனால் இப்போது வரை டைரக்சன் தான் தனது பாதை என்பதில் தெளிவாக இருக்கிறார் ப்ரணவ் மோகன்லால்.