அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் |
புதிய தலைமுறை சேனலின் நட்சத்திர செய்தி வாசிப்பாளரான சரண்யாவுக்கு சமீபத்தில் லண்டனில் பணியாற்றும் அமுதனுடன் திருமணம் நடந்தது. விரைவில் அவர் தன் கணவருடன் லண்டனில் செட்டிலாகிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:
என் கணவர் அமுதன் லண்டனில் பெரிய நிறுவனங்களின் ஊழியர்களுக்கு மனநலம் குறித்த பயிற்சி அளித்து வருகிறார். தியானக் கலையிலும் வல்லவர். திருமணம் முடிந்ததும், தற்போதுதான் தேனிலவு பயணங்களை முடித்து திரும்பியிருக்கிறோம். அடுத்து கணவருடனேயே லண்டனில் செட்டிலாகிறேன். புதிய தலைமுறையில் இனி செய்தி வாசிக்கும் வாய்ப்பு இல்லை. என்றாலும் தொடர்ந்து சேனலுடன் தொடர்பில் இருப்பேன். லண்டனில் இருந்தபடியே எனது பங்களிப்பை செய்வேன். டிசம்பர் இசை கச்சேரி முற்றும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு இந்தியா வருவோம் என்கிறார் சரண்யா.