'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' சூர்யாவின் 'மாசு என்கிற மாசிலாமணி' எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்த 'பாகுபலி' என மூன்று பெரிய படங்கள் நேற்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகின என்று சொன்னால் சிலர் அதிர்ச்சியடைவார்கள்! சிலர் அடிக்க வருவார்கள். எப்பய்யா இந்தப்படங்களை டிவயில் போட்டாங்க என்று சிலர் குழம்பிப்போவார்கள்.
இந்தத் தகவல் பொய்யில்லை, உண்மைதான். இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த ராஜமௌலியின் 'பாகுபலி' படம் இன்னமும் சில தியேட்டர்களில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடி வசூலில் பெரும் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது.
மலையாளத்தில் டப்பிங் செய்யப்பட்டு வெளியான இப்படத்தின் அதிகாரபூர்வமான டிவிடி சமீபத்தில் வெளியானது. இதனை தொடர்ந்து பிரபல மலையாள சேனலான மழவில் மனோரமாவில் நேற்று மாலை 6 மணிக்கு 'பாகுபலி' படத்தின் மலையாள பதிப்பு ஒளிபரப்பானது.
சூர்யா நடித்த ' 'மாசு என்கிற மாசிலாமணி' திரைப்படமும் சூர்யா மலையாள சேனலில் நேற்று மாலை ஒளிபரப்பப்பட்டது.
கேரளத்தில் இப்படி என்றால் ஆந்திராவிலோ அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பான 'எந்தவானி காடு' பிரபல தெலுங்கு சேனலான மா டிவியில் ஒளிபரப்பப்பட்டது.