ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டின் பிரபல நடிகையான வித்யாபாலன், சினிமாவுக்கு வருவதற்கு முன்பு டிவி சீரியல் நடிகையாக இருந்தவர். ஜீ டிவி இந்தி சேனலில் ஒளிபரப்பான ஹாம் பாஞ்ச் என்ற தொடரில் லீடு ரோலில் நடித்தார். அதன்பிறகுதான் சினிமாவுக்கு வந்தார். அவரது நடிப்பு ஓரிரு படங்களிலேயே பேசப்பட்டதால், வெயிட்டான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடித்து வருகிறார் வித்யாபாலன். அதில் த தர்ட்டி பிக்சர்ஸ், கஹானி உள்ளிட்ட சில படங்கள் அவருக்கு இந்தியா முழுக்க ரசிகர்களை உருவாக்கிக்கொடுத்தன.
ஆனபோதும், திருமணத்திற்கு பிறகு அவருக்கான படவாய்ப்புகள் குறைந்து விட்டன. அதனால் இதை பயன்படுத்தி அவரை மக்கள் பிரச்னை சம்பந்தமாக கலந்துரையாடும் ஒரு டிவி நிகழ்ச்சியில் பங்கேற்க ஒரு பிரபல இந்தி சேனல் அழைப்பு விடுத்திருக்கிறதாம். அதற்கு வித்யாபாலனும் ஓகே சொல்லி விட்டாராம். மேலும், பாலிவுட்டைப் பொறுத்தவரை அமீர்கான் உள்ளிட்ட பிரபலங்களே சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவதால், இனி தொடர்ந்து வித்யாபாலனின் கவனம் சின்னத்திரையிலும் இருக்கும் என்கிறார்கள்.