ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
குங்குமப்பூ தொடரில் அறிமுகமான ரிந்தியா, திருமதி செல்வம் சீரியல் மூலம் பாப்புலர் ஆனார். கடைசியாக பாரதி கண்ணம்மா தொடரில் நடித்தார், அவ்வப்போது மலையாள சீரியல்களிலும் நடித்து வருகிறார். தற்போது பாக்யலட்சுமி என்ற மலையாளத் தொடரில் வில்லியாக நடித்து வருகிறார். இது தமிழில் ஒளிபரப்பாகும் தெய்வமகள் தொடரின் ரீமேக் ஆகும்.
"வில்லி கேரக்டரில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை அது இப்போது நிறைவேறியிருக்கிறது. முன்பு மலையாள சீரியல்களில் நடிக்கும்போது தமிழ்நாட்டுக்கும், கேரளாவுக்கும் பறந்து கொண்டே இருப்பேன். தற்போது எனது கணவர் வீடு திருவனந்தபுரத்திலேயே இருப்பதால் அலைச்சலும் மிச்சம். விரைவில் புதிய தமிழ் சீரியலில் நடிக்க இருக்கிறேன். அது இன்றைய டிரண்டுக்கு ஏற்ற திகில் தொடர். அதில் நான் நடிக்கும் கேரக்டர் இப்போதைக்கு சஸ்பென்ஸ்" என்கிறார் ரிந்தியா.