‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
இன்றைக்கு சின்னத்திரைகளில் புற்றீசல்கள் போன்று தொகுப்பாளினிகள் ஏராளமானோர் படையெடுத்துக்கொண்டிருக்கின்றனர். அப்படி வருபவர்களில் சிலர் புகழ் பெற்றாலும் பலர் காணாமல் போய்க்கொண்டும் உள்ளனர். ஆனால் இப்படி வந்தவர்களில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து பல ஆண்டுகளாக நிலைத்து நின்று கொண்டிருப்பவர் டிடி என்றழைக்கப்படும் திவ்யதர்ஷினி மட்டுமே.
அவர் விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் ஆங்கராக வந்தபோதும், சினிமா பிரபலங்களை பேட்டி கண்டு வந்த காபி வித் டிடி என்ற நிகழ்ச்சிதான் திவ்யதர்ஷினியை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது. அதற்கு முக்கிய காரணம், பிரபலங்களின் ஜாலி அரட்டையாக அந்த நிகழ்ச்சி அமைந்ததுதான். அதற்கேற்ப அவர்களிடம் பேச்சுக்கொடுத்து சூடான விசயங்களைகூட சுவையான விவாதமாக மாற்றிக்காட்டினார் டிடி. அதனால் சினிமா பிரபலங்கள் மத்தியிலும் அவர் பிரபலமாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
இப்படிப்பட்ட திவ்யதர்ஷினி, தனது நிகழ்ச்சியில் பங்கேற்ற பல நடிகர் நடிகைகளிடம் நெருக்கமான நட்பு வளர்த்து வருகிறார். அதில் பல நடிகர்களை தனது அண்ணன்களாகவே அவர் நினைக்கிறாராம். அதனால் ஒவ்வொரு ஆண்டும் அவர்களுக்கு ராக்கி கட்டி விட்டு அண்ணன்களாக்கி வரும் அவர், விஜய், சூர்யா போன்ற நடிகர்களின் கையில் அடுத்தபடியாக ராக்கி கட்டி விடவும் சரியான நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறாராம்.