அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? |
புதிதாக உதயமாகியிருக்கும் எஸ் சேனலில், சுவாமி நித்யானந்தாவின் ஆன்மீக ஆலோசனைகளும், தியான சிகிச்சைகளும் என்ற நிகழ்ச்சி ஒரு நாளைக்கு இரண்டு முறை ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நேயர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்து வருகிறார் நித்யானந்தா.
தற்போது தமிழில் மட்டும் கிட்டத்தட்ட 40 சேனல்கள் வரை ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கின்றன. இதில் அனைத்து வகையான நிகழ்ச்சிகள் தரும் சேனல்கள் மட்டுமின்றி, சிறுவர் சேனல், காமெடி சேனல், மியூசிக் சேனல், குழந்தைகள் சேனல் என பலதரப்பட்ட சேனல்கள் அடங்கும். இந்த வரிசையில் தற்போது இணைந்திருக்கும் புதிய சேனல் எஸ் டிவி. அனைத்து வகை நிகழ்ச்சிகளையும் வழங்கி வரும் இந்த சேனல், சில ஆண்டுகளாக சேலத்தில் லோக்கல் சேனலாக ஒளிபரப்பாகி வந்தது. தற்போது சாட்டிலைட் சேனலாகியுள்ளது. இதில் ஆலயமணி, ஆல்பம், வானிலை, தினம் ஒரு தகவல், அழகும் அறிவும், உடல் வளம், என் டைம், வாழ்த்துக்கள், யார் லீடர், சினிமா நிகழ்ச்சிகள் என பல சுவையான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. முக்கியமாக, சுவாமி நித்யானந்தாவின் ஆன்மீக ஆலோசனைகளும் தியான சிகிச்சைகளும் என்ற நிகழ்ச்சி லைவாக ஒளிபரப்பாகி வருகிறது.
தினமும் காலை 8 மணி முதல் 9 மணி வரை, இரவு 7 மணி முதல் 8 மணி வரை இந்த நிகழ்ச்சி லைவாக ஒளிபரப்பாகிறது. இதில் நேயர்கள் கேட்கும் கேள்விகளுக்கு விளக்கமளிக்கும் நித்யானந்தா, அவர்களுக்கு ஆன்மீக ரீதியான சிகிச்சைகளும் வழங்குகிறார். அதோடு, தனது ஆசிரமத்தில் நடைபெறும் தியான சிகிச்சைகளிலும் நேயர்கள் பங்கேற்று பலன் பெறுமாறு அழைப்பு விடுத்து வரும் நித்யானந்தா. செப்டம்பர் 6-ந்தேதி பெங்களூர் ஆசிரமத்தில் நடைபெறும் தியான சிகிச்சையில் கலந்து கொள்ளுமாறும் பக்தகோடிகளுக்கு இந்த நிகழ்ச்சி மூலமாகவும் அழைப்பு விடுத்து வருகிறார்.