‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக ஒரு வித்தியாசமான டாக் ஷோவாக ஜீ தமிழ் தொலைக்காட்சியால் ஆரம்பிக்கப்பட்டது சொல்வதெல்லாம் உண்மை. தனி மனிதர், தனி குடும்பத்தின் பிரச்னைகளை கேமராவுக்கு முன்னால் பேசி அதற்கான தீர்வு காணும் இந்த நிகழ்ச்சி மக்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. குறிப்பாக பெண்களுக்கு. அடுத்த வீட்டு சங்கதிகளை ஆர்வமுடன் கவனிக்கும் நம் மனோபாவமே இந்த வெற்றிக்கு காரணமாக அமைந்தது.
இந்த நிகழ்ச்சி மூலம் பல பிரச்னைகள் தீர்க்கப்பட்டிருக்கிறது. சில பிரச்னைகள் முன்பை விட பெரிதாகி இருக்கிறது. மறைக்கப்பட்ட பல கொலைகளும் வெளிவந்திருக்கிறது. ரவடிகள் சேனலை தாக்கியது. சேனல் ஊழியர்களின் மறியல் போராட்டம் என பல தடைகளை தாண்டி வந்திருக்கிறது இந்த நிகழ்ச்சி. சட்டம் செய்ய வேண்டிய வேலையை இவர்கள் செய்கிறார்கள். கட்டப்பஞ்சாயத்து நடத்துகிறார்கள் என்ற விமர்சனமும் இந்த நிகழ்ச்சிக்கு உண்டு.
நிர்மலா பெரியசாமி, லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் நடத்திய இந்த நிகழ்ச்சியை தற்போது சுதா சந்திரன் நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சி நேற்றுடன் தனது 1000மாவது எபிசோடை ஒளிபரப்பி சாதனை படைத்துள்ளது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி ஜீ தமிழ் சேனலில் முத்திரை நிகழ்ச்சியாக தொடர்கிறது.