ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய் டிவியில் நீயா நானா, விஜய் விருதுகள், குற்றமும் பின்னணியும் நடந்தது என்ன, உன்னால் முடியும் போன்ற நிகழ்ச்சிகளை வழங்கி வருபவர் கோபிநாத். இவர் தெருவெல்லாம் தேவதைகள், ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீர்கள், நீயும் நானும் உள்பட சில புத்தகங்களையும் எழுதியிருக்கிறார். அந்தவகையில் இவர் ஒரு எழுத்தாளரும்கூட.
நீயா நானா நிகழ்ச்சி மூலம் பெரிய அளவில் பிரபலமாகிவிட்ட இவர், சமீபகாலமாக பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் விழாக்களிலும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வருகிறார். அப்படி தான் செல்லும்போது, மாணவர்களுக்கு பல அரிய தகவல்களையும் சொல்லும் கோபிநாத், நம்மால் முடியுமா என்ற மனநிலையில் இருப்பவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் சில அனுபவ கருத்துக்களையும் முன்வைக்கிறார்.
அந்த வகையில், ஒரு பள்ளிக்கு சிறப்பு விருந்தினராக சென்றிருந்த கோபிநாத், நம்மால் இது முடியுமா என்று யாரும் தாழ்வு மனப்பான்மையுடன் இருக்கக்கூடாது. நம்மாலும் முடியும் என்ற உறுதியுடன் செயல்பட வேண்டும். என்னை எடுத்துக்கொண்டால், நான் அறந்தாங்கியில் இருந்து சென்னை வந்தபோது, பேருந்தில் ஏறி அமர்ந்தேன். அப்போது பலரும் அவர்களின் இருக்கையை சாய்த்துக்கொண்டு படுத்தனர். ஆனால் என்னால் எனது இருக்கையை எப்படி சாய்ப்பது என்று தெரியவில்லை. அதுபற்றி மற்றவர்களிடம் கேட்கவும் எனக்கு தயக்கம். அதனால் சென்னை வந்து சேருவது வரை சாய்ந்து படுக்க முடியாமல் உட்கார்ந்தபடியே பயணித்தேன்.
ஆனால், சென்னை வந்து இறங்கும்போது, நான் எழும்ப முற்பட்டேன். அப்போது எனது கை இருக்கையின் பக்கவாட்டில் இருக்கும் புஷ்பேக்கில் பட்டு, இருக்கை சாய்ந்தது. இதை அழுத்திதான் அவர்களெல்லாம் சாய்ந்து படுத்தபடி வந்திருக்கிறார்கள் என்பது இறங்கும் இடத்தில்தான் எனக்கு தெரியவந்தது. அந்த அளவுக்கு சென்னைக்கு வரும்போது நான் எதுவும் தெரியாதவனாகத்தான் வந்தேன். அதன்பிறகுதான் நிறைய விசயங்களை தெரிந்து கொண்டேன்.