பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
திரைப்பட நடிகராக இருந்து சின்னத்திரை தொகுப்பாளர் ஆனவர் ரிஷி. டீலா நோ டீலா, கையில் ஒரு கோடி ஆர் யூ ரெடி போன்ற கேம் ஷோக்களை தொகுத்து வழங்கி புகழ்பெற்றார். தற்போது சூப்பர் சேலன்ஞ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த ரிஷியை சமீபமாக சினிமாவில் பார்க்க முடியவில்லை.
இதுகுறித்து அவர் கூறியதாவது: பெரிய பெரிய சினிமா நட்சத்திரங்கள் தொகுத்து வழங்க வேண்டிய நிகழ்ச்சியை என்னை நம்பி ஒப்படைத்தார்கள். எந்த முன் அனுபவமும் இல்லாமல் அந்த நிகழ்ச்சிகளை நடத்தினேன். இப்போது சின்னத்திரை கலைஞர்கள் பங்குபெறும் சூப்பர் சேலன்ஞ் நிகழ்ச்சியை நடத்தி வருகிறேன். இது பரிசுக்கான போட்டி நிகழ்ச்சியல்ல. ஜாலியான கலாட்டா நிகழ்ச்சி, 10 எபிசோட்கள்தான் பிளான் பண்ணியிருந்தோம். நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் எபிசோட்களை அதிகப்படுத்தியிருக்கிறோம்.
நேரம் கிடைக்கும் போது நாடங்களில் நடிக்கிறேன். இது என் திறமையை வளர்த்துக் கொள்ள உதவுகிறது. சினிமாவில் நிறைய வாய்ப்புகள் வருகிறது. எல்லாமே சப்போர்ட்டிங் கேரக்டராக இருப்பதால் ஒப்புக் கொள்ளவில்லை. ரகுவரன் மாதிரி வில்லன் கேரக்டர்களில் நடிக்க ஆசை. அதற்கான வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். என்கிறார் ரிஷி.