ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
புதுயுகம் தொலைக்காட்சியும், நடிகை ராதிகாவின் ராடன் டி.வியும் இணைந்து நடிகவேளின் ராஜபாட்டை என்ற நாடக போட்டியை தமிழ்நாடு முழுவதும் நடத்தியது. இதில் நடிகவேள் எம்.ஆர்.ராதா நடித்த நாடகத்தை இன்றைய நாடக நடிகர்கள் நடித்து காட்டினார்கள். இதில் சிறந்த நாடகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு சென்னையில் நடந்த விழாவில் நடத்தப்பட்டது.
இதில் முதன் மூன்று சிறந்த நாடகங்களை இயக்குனர் கே.பாக்யராஜ், நடிகை ஸ்ரீப்ரியா, ராதிகா, கிரேஸி மோகன் ஆகியோர் நடுவர்களாக இருந்து தேர்வு செய்தனர். முதல் நாடகத்திற்கு ஒரு லட்சம் ரூபாயும், இரண்டாவது இடம்பெற்ற நாடகத்திற்கு 75 ஆயிரம் ரூபாயும், முன்றாவது இடம் பெற்ற நாடகத்திற்கு 50 ஆயிரம் ரூபாயும் பரிசாக வழங்கப்பட்டது.