'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார் ப்ரியா பவானி சங்கர். "இதுவே எனது கடைசி தொடர் இனி நடிக்க மாட்டேன்" என்கிறார் ப்ரியா. மேலும் அவர் கூறியிருப்பதாவது:
நான் நடிக்க வந்தது எதிர்பாராமல் நடந்த விஷயம் என்றாலும் அனுபவித்து நடித்து வருகிறேன். மாதத்தில் 10 நாட்கள் படப்பிடிப்பு இருக்கிறது. நான் அனுபவம் வாய்ந்த நடிகை அல்ல. ஆனால் அனுபவம் வாய்ந்தவர்களோடு நடிப்பதால் நிறைய கற்றுக் கொள்கிறேன்.
தற்போது ஜோடி நம்பர் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறேன். இந்த நிகழ்ச்சியை முன்பு திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கினார். அவர் அளவிற்கு என்னால் முடியாவிட்டாலும் நன்றாக செய்வதாக எல்லோரும் சொல்கிறார்கள். நடிப்பை விட எனக்கு நிகழ்ச்சி தொகுப்புதான் பிடித்திருக்கிறது. எனவே இனி நிகழ்ச்சி தொகுப்பாளராகவே தொடர இருக்கிறேன். கல்யாணம் முதல் காதல் வரைதான் நான் நடிக்கும் கடைசி தொடரா இருக்கும். என்கிறார் ப்ரியா.