இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
சின்னத்திரையில் மருமகள், ஜனனி, குங்குமம், கல்கி, நம்ம குடும்பம், ருத்ரா என பல தொடர்களில் நடித்தவர் குஷ்பு. அதோடு, கோடீஸ்வரி, ஜாக்பாட், நம்ம வீட்டு மகாலட்சுமி, அச்சம் தவிர் என பல நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கியிருக்கிறார். அதோடு மானாட மயிலாட உள்ளிட்ட சில ரியாலிட்டி ஷோக்களிலும் ஜட்ஜாக இருந்திருக்கிறார்.
இப்படி சின்னத்திரையில், நடிகை, தயாரிப்பாளர், ஆங்கர் என பன்முகம் காட்டிவரும் குஷ்பு, கடைசியாக வேந்தர் தொலைக்காட்சியில் நினைத்தாலே இனிக்கும் என்றொரு நிகழ்ச்சியில் சினிமா நடிகர் நடிகைகளிடம் பேட்டி கண்டு வந்தார்.
இப்போது மீண்டும் அதே போன்றொரு நிகழ்ச்சியை சிம்ப்ளி குஷ்பு என்ற பெயரில் ஜீ தமிழ் சேனலில் நடத்தப்போகிறார் குஷ்பு. இந்த நிகழ்ச்சியில், சினிமாவில் நிற்ககூட நேரமில்லாமல் பிசியாக இருக்கும் பிரபலங்களை அழைத்து வந்து மனம் திறந்து பேச வைக்கப்போகிறாராம் குஷ்பு.
ஆகஸ்ட் 22-ந்தேதி முதல் ஒவ்வொரு சனிக்கிழமை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கும் இந்த சிம்ப்ளி குஷ்பு நிகழ்ச்சிக்கான ப்ரமோஷனை இப்போதே ஜீ டிவி தொடங்கி விட்டது.