தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாள நடிகர் சங்கத்தின் (அம்மா) தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில் அனைவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இவர்களின் பதவியேற்பும். வருடாந்திர பொதுக்குழு கூட்டமும் திருவனந்தபுரத்தில் நடந்துது. இந்த பொதுக்குழுவில் நலிந்த கலைஞர்களுக்கு உதவும் வகையிலும், அவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையிலும் டி.வி.சீரியல் தயாரிக்க முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பொதுக்குழுவிற்கு பிறகு இது தொடர்பாக மலையாள நடிகர் சங்கத் தலைவர் இன்னோசென்ட் கூறியதாவது: மலையாள நடிகர் சங்கம் நாடகங்களை நடத்தி வருகிறது. நிதியை பெருக்குவதற்காக நட்சத்திர கலையிரவுகள், விருது வழங்கும் விழாக்களையும் நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக சீரியல்கள் தயாரிக்க முடிவு செய்திருக்கிறது.
மலையாள நடிகர் சங்கம் 105 நலிந்த கலைஞர்களுக்கு மாதம் 5 ஆயிரம் பென்சன் வழங்கி வருகிறது. இதற்காக ஆண்டுக்கு 50 லட்சம் செலவாகிறது. இன்னும் பல பணிகளை ஆற்றி வருகிறது. அதற்கு இன்னும் கூடுதலான நிதி வேண்டும். அதேபோல எல்லா கலைஞர்களுக்கும் தொடர்ச்சியாக சினிமா வாய்ப்பு கிடைப்பதில்லை. அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கவும், நிதி திரட்டவும் சீரியல் தயாரிக்க முடிவு செய்திருக்கிறோம். என்றார். இந்த பொதுக்குழுவில் செயலாளர் மம்முட்டி, துணை தலைவர் மோகன்லால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.