ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் |
டப்பிங் தொடர்களால் எங்களது வேலை வாய்ப்பு பறிபோகிறது என்று சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு போராட்டம் நடத்தி வருகிறது. என்றாலும் எல்லா சேனல்களுமே டப்பிங் தொடர்களை ஒளிபரப்பி வருகிறது. பொதுவாக புகழ்பெற்ற நேரடி தமிழ் தொடர்கள்தான் மறு ஒளிபரப்பாகும். அதுவும் ப்ரைம் டைமில் ஒளிபரப்பான தொடர் நான் பிரைம் டைமில் ஒளிபரப்பாகும்.
ஆனால் முதன் முறையாக ஒரு டப்பிங் தொடர் மறுஒளிபரப்பாகிறது. அதுவும் ப்ரைம் டைமான இரவு 7 மணிக்கு. திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகிறது உள்ளம் கொள்ளை போகுதடா என்ற டப்பிங் தொடர். பாலிமர் தொலைக்காட்சியில் மிகுந்த வரவேற்புடன் ஒளிபரப்பான இந்த தொடர் 650 எபிசோட்களை கொண்டது. அத்தனை எபிசோடும் மறு ஒளிபரப்பாகிறது. ராம்கபூர், சாக்ஷி தன்வார், ஈவா க்ரோவர், ரேணுகா இஸ்ராணி நடித்துள்ளனர்.