ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் |
சின்னத்திரை ரசிகர்களுக்கு சந்த்ராவை தெரியாமல் இருக்க முடியாது. அந்த அளவிற்கு கடந்த 10 ஆண்டுளாக தமிழ், மலையாளம், தெலுங்கு சீரியல்களின் ஹீரோயினாக நடித்து வருகிறவர். கே.பாலச்சந்தர், பாலுமகேந்திரா இயக்கிய தொடர்களின் மூலம் புகழ் பெற்றவர். தற்போது, தமிழில் பாசமலர் தொடரிலும், தெலுங்கில் சீதகோகா சிலுகா என்ற தொடரிலும் நடித்து வருகிறார். அவ்வப்போது சில மலையாளம் மற்றும் தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார்.
சந்த்ரா தற்போது தனது தாயருடன் இணைந்து மியரல் ஆரா என்ற நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். இது கேரளாவின் புகழ்பெற்ற சுவர் ஓவியங்களை ஆடைகளில் வரைந்து டிசைன் பண்ணித் தரும் நிறுவனம். கேரள இந்து மணமகள் அணியும் ஆடை இது. தற்போது இதனை சென்னையில் நடத்தி வரும் சந்த்ரா விரைவில் கேரளாவில் தொடங்க இருக்கிறார். சந்த்ராவின் அம்மா, மகளுக்கு தீவிரமாக மாப்பிள்ளை தேடி வருகிறார். விரைவில் திருமணம் நடக்கும் என்று தெரிகிறது.