ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் சேனல்கள் டப்பிங் சீரியல்களை ஒளிபரப்பகூடாது, அது இங்குள்ள கலைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கிறது என்று சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு போராட்டம் நடத்தி வரும் சூழ்நிலையில் ராஜ் டி.வி. வருகிற மே 4ந் தேதி முதல் அழகிய லைலா என்ற புதிய டப்பிங் சீரியலை ஒளிபரப்ப இருக்கிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9.30 மணிக்கு இந்த சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது.
பார்வதியும், ருத்ராவும் பால்ய பருவத்திலிருந்தே நண்பர்கள், இருவரும் வளர்ந்து பெரியவர்களானதும் ருத்ரா ராணுவ தளபதியாகிறான். பார்வதி, ருத்ராவை காதலிக்கிறாள். ஆனால் ருத்ரா நாடுதான் முக்கியம் என்று சொல்லி காதல், பாசம், சென்டிமென்ட்டுக்கு அப்பாற்பட்டு வாழ்கிறான். ருத்ராவின் காதலை பெற பார்வதி தொடர்ந்து போராடுவதுதான் சீரியலின் கதை.