தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கலைஞர் தொலைக்காட்சியில் புகழ்பெற்ற நிகழ்ச்சி மானாட மயிலாட. இதனை நடன இயக்குனர் கலா மாஸ்டர் இயக்கி வருகிறார். பிரபல முன்னணி நட்சத்திரங்கள் நடுவர்களாக இருந்து வருகிறார்கள். தற்போது மானாட மயிலாட நிகழ்ச்சியின் 10வது சீசன் நடந்து கொண்டிருக்கிறது.
தற்போது இந்த நிகழ்ச்சி கின்னஸ் சாதனை படைத்துள்ளது. நடன நிகழ்ச்சிகளில் ஏம்ஸ் ரூம் இல்யூஷன் என்ற ஒரு முறை உள்ளது. அதாவது விதவமான மேடை அமைத்து பார்வையாளர்களை ஏமாற்றுவது. ஒரே மேடையில் ஒருவரே இருவராக தோன்றுவது. ஒருவர் மிக உயரமாகவும், ஒருவர் உயரம் குறைந்தும் தெரிவது இப்படியான மாயத் தோற்றங்களை உருவாக்குவது இந்த வகை.
இந்த ஏம்ஸ் ரூம் இல்லூஷன் டைப் நிகழ்ச்சி மானாட மயிலாடவில்தான் உலகில் இதுவரை இல்லாத அளவிற்கு பிரமாண்டமாகவும், அதிக நேரமும் நடத்தப்பட்டுள்ளது. ஏவிஎம் ஸ்டூடியோவில் அமைக்கப்பட்டிருந்த அரங்கத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியை கின்னஸ் ரிக்கார்ட் பிரதிநிதிகள் பார்த்தனர். அதன் பிறகு அதனை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இணைத்தனர். கின்னஸ் ரிக்கார்ட் அதிகாரி லூசியா சினிகேலினியி லண்டனில் இருந்து வந்து கின்னஸ் சான்றிதழை நிகழ்ச்சி இயக்குனர் கலா மாஸ்டரிடம் வழங்கிச் சென்றார்.