'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடந்த சில தினங்களுக்கு முன்பு சின்னத்திரையில் பல சீரியல்களை இயக்கிய இயக்குனர் பாலாஜி யாதவ் வேலைவாய்ப்பு இல்லாமல், வருமானம் இல்லாமல் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். இது சின்னத்திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. டப்பிங் சீரியல்களின் வருகையால் சின்னத்திரை கலைஞர்களுக்கு வேலை வாய்ப்பு குறைந்து வருவதை பாலாஜி யாதவின் மரணம் உறுதிப்படுத்துவதாக அமைந்தது.
இந்த நிலையில் பாலாஜி யாதவிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனம் (பெப்சி), சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு சார்பில் இந்த நிகழ்ச்சியில் பேசிய அனைவருமே டப்பிங் சீரியல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பேசினார்கள்.பெப்சி தலைவர் சிவா, சின்னத்தரை நடிகர் சங்கத் தலைவர் நளினி, கூட்டமைப்பின் தலைவர் கவிதாபாரதி, தயாரிப்பளர் சங்க நிர்வாகி குட்டி பத்மினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் முடிவில் கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது: டப்பிங் சீரியல்கள் அதிகரிப்பால் பலர் வேலை இழந்து வருகிறார்கள். இயக்குனர் பாலாஜி யாதவ் தற்கொலை செய்து கொண்டார். தொடர்ந்து டப்பிங் சீரியல் ஒளிபரப்படுவதால் சின்னத்திரையின் அனைத்து பிரிவு கலைஞர்களும் பாதிக்கப்படுகிறார்கள். சேனல்கள் டப்பிங் சீரியல்களை நிறுத்தி விட்டு நேரடி தமிழ் சீரியல்களை ஒளிபரப்பி வேலைவாய்ப்பை பெருக்கித்தரவேண்டும். இல்லாவிட்டால் டப்பிங் சீரியல்களை ஒளிப்பரப்பும் சேனல்களை எதிர்த்து போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.