ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் சரவணன் மீனாட்சி தொடர் மிகவும் பாப்புலரான தொடர். இந்த தொடரின் முதல் பகுதியில் சரவணாக நடித்த மிர்ச்சி செந்திலும், மீனாட்சியாக நடித்த ஸ்ரீஜாவும் நிஜ வாழ்க்கையிலும் இணைந்து விட்டதால் சீரியலிலிருந்து விலகினார்கள். சிறிய இடைவெளிக்கு பிறகு சரவணன் மீனாட்சி இரண்டாம் பகுதி தொடங்கியது. இதில் சரவணனாக இர்பானும் மீனாட்சியாக மகாலட்சுமியும் நடித்தனர். இர்பானுக்கு சினிமாவில் நடிக்கும் ஆர்வம் இருந்ததால் அவரும் இடையில் விலகினார். அவருக்கு பதிலாக வெற்றி, சரவணன் கேரடக்டரில் நடிக்க ஆரம்பித்தார். இப்போது அவரும் வெளியேறிவிட்டார்.
சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையன் என்கிற முக்கியமான கேரக்டர் வரும். மீனாட்சி சரவணனை திருமணம் செய்வாளா? வேட்டையனை திருமணம் செய்வாளா என்கிற பரபரப்பில் தொடர் சென்றபோது மீனாட்சி யாரை திருமணம் செய்ய வேண்டும் என்கிற முடிவை பார்வையாளர்களிடம் விட்டார்கள். பெரும்பான்மையான நேயர்கள் வேட்டையனைத்தான் மணக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கவே அப்படியே கதையை மாற்றி விட்டதாகவும், இதனால் சரவணன் கேரக்டர் டம்மியாக்கப்பட்டதாகவும். அதன் காரணமாக வெற்றி வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.
இர்பானுக்கு பிறகு வெற்றி வந்தபோது இர்பானிடமிருந்த இளமையும், சுறுசுறுப்பும் வெற்றியிடம் இல்லை என்கிற கருத்து தயாரிப்பு தரப்புக்கு இருந்தாகவும் இதனால் திட்டமிட்டே வெற்றி வெளியேற்றப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. அதேசமயம் இர்பான் போன்று வெற்றியும் சினிமா பக்கம் சென்றுவிட்டதால் தொடரிலிருந்து வௌியேறியதாக கூறப்படுகிறது. எது எப்படியோ சீரியல் கதை மாதிரி அதை சுற்றி நடக்கும் கதைகூட விறுவிறுப்பாகத்தான் இருக்கிறது.