ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சமீபகாலமாக சின்னத்திரைகளில் நடத்தப்படும் சில நிகழ்ச்சிகளில் ரசிகர்களையும் இழுத்து வருகிறார்கள். ஆரம்பத்தில் பிடித்த பாடல், பிடித்த காமெடி என மட்டுமே நேயர்களுடன் லைவ் புரோகிராம் நடத்தி வந்தனர். ஆனால் இப்போது அரசியல் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு கருத்துக்களும் நேயர்களிடம் கேட்கப்பட்டு வருகிறது.
அதிலும், விஜய் டிவி நடத்தி வரும் ஜூனியர் சிங்கர் நிகழ்ச்சியில் இறுதியாக தேர்ந்தெடுக்கப்படும் போட்டியாளர்களை நேயர்கள் கொடுக்கும் ஓட்டை வைத்துதான் முடிவு செய்கிறார்கள். அந்த வகையில், தமிழ்நாடு மட்டுமின்றி உலகமெங்கிலும் உள்ள தமிழர்களும் தங்களுக்கு பிடித்த பாடகர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் ஓட்டளிக்கிறார்கள்.
அந்த வகையில், சமீபத்தில் நடந்து முடிந்த நான்காவது சீசன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் மட்டுமே சுமார் 2 கோடி பேர் எஸ்எம்எஸ் மூலம் வாக்களித்தார்களாம். அப்படி செய்யப்பட்ட ஒவ்வொரு எஸ்எம்எஸ்க்குமே 5 ரூபாய் வசூலிக்கப்பட்டதாம். ஆனால் 5 ரூபாய் வசூலித்த விஜய் டிவி அதில் ஒரு எஸ்எம்எஸ்க்கு ஒரு ரூபாய்தான் சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனத்துக்கு கொடுத்ததாம்.
அதேபோல், வெளிநாடுகளில் இருந்து செய்யப்பட்ட ஒவ்வொரு எஸ்எம்எஸ்க்கும் தலா 15 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டதாம். அதிலும் செல்போன் நிறுவனத்துக்கு 1 ரூபாய் தான் கொடுக்க்கப்பட்டதாம். அந்த வகையில், அந்த நிகழ்ச்சியில் ஒரு நாள் மட்டும் அதாவது இரவு 7 மணியில் தொடங்கி 12 மணி வரை வாக்களித்தவர்கள் செலுத்திய எஸ்எம்எஸ் கட்டணமே விஜய் டிவிக்கு சுமார் 20 கோடியை சம்பாதித்து கொடுத்துள்ளதாம்.