ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
முன்னணி சேனலில் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகி வரும் மகாபாரதம் தொடரை சினிவிஸ்டாஸ் நிறுவனம் தயாரித்து ஒளிபரப்பி வருகிறது. இந்த தொடர் தற்போது 100 வது எபிசோடை தொட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து பல புதுமைகளை அதில் செய்ய முடிவெடுத்திருக்கிறார்கள்.
இதுபற்றி தொடரின் இயக்குனர் சி.வி.சசிகுமார் கூறியதாவது: எங்கள் தொடரில் மகாபாரத கதை மைய இழையாக இருந்தபோதும் அது தொடர்பாக இதுவரை பலரும் அறிந்திராத பல புதுமையான, சுவையான சம்பவங்களை காட்சிப்படுத்தியிருக்கிறோம். இதற்காக தமிழில் கம்பராமாயணம் போல் தெலுங்கு, கன்னடம், மராத்தி, இந்தி, குஜராத்தி, பெங்காலி, ராஜஸ்தானி, இந்தோனேஷிய மொழிகளில் வெளிவந்திருக்கும் மகாபாரத நூல்களை படித்து நமக்குத் தெரியாத பல சம்பங்களை அறிந்து அதனை மகாபாரதத்தின் இடையில் சேர்க்கிறோம்.
இதுவரை யாரும் செய்யாத ஒரு புதுமையை செய்ய இருக்கிறோம். அது தமிழ்நாட்டின் தொன்மை கலைகளான பொய்கால் குதிரை, நடன கதைகள், கிராமிய கூத்து, பஞ்சராத்ர தூது வாத்யம், போன்ற கலைகளை பொருத்தமான இடங்களில் சேர்க்க இருக்கிறோம். இது ரசிகர்களுக்கு புதுமையாக இருக்கும்.
இதுதவிர தொடருக்காக பெங்களூரில் 1 கோடி ரூபாய் செலவில் அரண்மனை செட் போட்டிருக்கிறோம். தமிழ் தொலைக்காட்சி தொடர் ஒன்றுக்கு இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் செட் போட்டிருப்பது இதுவே முதல் முறை. என்றார் இயக்குனர் சி.வி.சசிகுமார்.