ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சமீபகாலமாக சின்னத்திரையில் முகம் காட்டி புகழ் பெற்றவர்கள் சினிமாத்துறைக்குள் என்ட்ரி கொடுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலும் சிவகார்த்திகேயன், மா.கா.பா.வின் வரவுக்கு பிறகு சில பெண் நிகழ்ச்சி தொகுப்பாளினிகளும் சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு தேடி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது, தனியார் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினிகளில் ஒருவரான அனுஷ்யாவும் சினிமாவில் என்டரி கொடுக்கிறார். ஆனால் இவருக்கு ஹீரோயினியாக நடிக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் இல்லையாம். வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்கவே ஆசைப்படுகிறார். காரணம் கேட்டால், கதாநாயகி என்று இறங்கி விட்டால் கதைக்கு தேவை என்று கவர்ச்சியாக நடிக்க சொல்வார்கள். ஆனால் நமக்கு அது சரிப்பட்டு வராது.
அதனால்தான் நடிக்க சில வாய்ப்புகள் வந்தபோதே, கேரக்டர் ரோல்களில் மட்டும்தான் நடிப்பேன் என்று சொல்லி விட்டேன. மேலும், கதாநாயகி என்றால் சில வருடஙக்ள் தான் நீடிக்க முடியும். ஆனால், ஆனால் எனக்கு இந்த கலைத்துறையில் நீண்டகாலம் இருக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதனால்தான் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக நடிப்பதுதான் சரியான வழி என்று முடிவெடுத்திருக்கிறேன் என்று கூறும் அனுஷ்கா, தற்போது என் கைவசம் இரண்டு புதிய படங்கள் உள்ளது. மேலும், சினிமாவில் பிசியாகும் வரை சினிமா, சின்னத்திரை என இரணடு துறைகளிலும் கவனம் செலுத்தவும் திட்டமிட்டுள்ளேன் என்கிறார் அனுஷ்யா.