தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி |
மனிதனின் உயர்வான பண்புகளையும் எப்படி வாழவேண்டும் என்கிற கருத்துக்களையும் பல்வேறு புராணங்களிலிருந்து கதைகளை நாடகமாக்கி தர்மத்தின் குரல் என்ற பெயரில் நாடகமாக வௌியிட இருக்கிறார்கள். நமது சனாதன தர்மத்தின் மேன்மைகளை ஸ்ரீ சிருங்கேரி சாரதா பீடம், ஸ்ரீ காஞ்சி மடம், ஸ்ரீ அஹோபில மடம், ஸ்ரீ மத்வ பீடாதிபதிகள், ஸ்ரீ ஆதினங்கள் மற்றும் சான்றோர்கள் வழங்க இருகிறார்கள். தர்மபூமி, மோட்சபூமி, கர்மபூமி, ஞானபூமி, என்று ஆழ்வார்களாலும், நாயன்மார்களாலும், போற்றப்படும் நமது பாரத பூமியில் தழைக்கும் சனாதன தர்மத்தை பல்வேறு வடிவங்களில் வழங்க இருக்கிறார்கள்.
முதன் முறையாக சென்னைத் தொலைக்காட்சியின் பொதிகையில் சனாதன தர்மத்தின் உட்கருத்துக்களை எளிய முறையில் பாமர மக்களுக்கு புரிகிற வகையில் வழங்க இருக்கிறோம். பொதிகை தொலைகாட்சியில் ஜனவரி 5ல் இருந்து திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 7 மணிக்கு ஒளிபரப்பப்படும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போதனை கதையினை வழங்க உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் அறிய புகைப்படங்களும் பெரியவரின் பொன்மொழிகளும் இடம் பெரும். நிகழ்ச்சியில் குரு, சிஷ்யர்களின் வேதங்களின் சாரம், உபநிடதங்களின் ஆழ்ந்த சிந்தனை, புராணங்களின் புனித கருத்துக்கள், பக்தி மார்க்கத்தின் சிறப்பு, ஞான மார்க்கத்தின் மேன்மை, நமது கலாச்சாரத்தின் ஊன்றி விட்ட நன்னெறிகள், மனிதர்களின் கடமைகள், மகான்களின் உயர்வு என்று பல குரல்கள் ஒன்று சேர்ந்து ஒலிக்க உள்ளது என்கின்றது தர்மத்தின் குரலை தயாரிக்கும் ஸ்ரீ மகாலஷ்மி டெலிபிலிம்ஸ். விட்டல் நாராயணன் இந்த தொடரை இயக்குகிறார்.