ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
ஒரு காலத்தில் சின்னத்திரையில் சினிமா மட்டுமே ஒளிபரப்பானது. குறும்படங்களை கண்டு கொள்வதில்லை. இப்போது குறும் படங்களுக்கும் மவுசு ஏற்பட்டிருக்கிறது. நாளைய இயக்குனர் நிகழ்ச்சி மூலம் குறும்படங்களுக்கு மவுசு வந்தது. இப்போது எல்லா தொலைக்காட்சிகளும் குறும்படங்களை ஒளிபரப்புகிறது.
இப்போது இதன் அடுத்த கட்டமாக ஆவணப் படங்களுக்கு முக்கியத்தும் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். குறிப்பாக செய்தி சேனல்களில் ஆவணப்படங்கள் முக்கியத்துவம் பெறத் தொடங்கி உள்ளது. தனி சிலாட்களை ஒதுக்கி ஆவணப்படங்களை ஒளிபரப்புகிறது.
சர்வதேச அளவில் கவனம் பெற்ற ஆவணப்படங்களையும் ஒளிரப்புகிறார்கள். இஸ்ரேல், பாலஸ்தீனம் போர், இலங்கை இறுதியுத்தம், நோபல் பரிசு பெற்ற மலாலாவின் வாழ்க்கை, சேகுவாராவின் கடைசி நாட்கள், காஷ்மீரில் நடப்பது என்ன? என்பது போன்ற சர்வதேச ஆவணப்படங்களும், தர்மபுரி பெண் சிசு கொலைகள், மீத்தேன் வாயு பிரச்சினை, கூடங்குளம் அணுஉலை போன்ற உள்ளூர் ஆவணப்படங்களும் ஒளிபரப்பாகிறது. இதற்கு நேயர்களிடம் நல்ல வரவேற்பும் கிடைக்கிறது. தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு செலவே இல்லாமல் நல்ல புட்டேஜும் கிடைக்கிறது.