Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

அஜீத்தோட சிம்பிளிசிட்டி பிடிக்கும்! - டிவி நடிகை காயத்ரி பேட்டி

13 டிச, 2014 - 14:01 IST
எழுத்தின் அளவு:

சின்னத்திரை சேனல்களில் நடிகை, தொகுப்பாளினி என இரண்டு முகம் கொண்டவர் காயத்ரி. கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி தொடர்களில் நடித்துள்ள அவர், தற்போது சினிமாவிலும் கால் பதித்திருக்கிறார்.


தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...




மீடியாவுக்குள் எப்படி வந்தீர்கள்?


எங்க அப்பா - அம்மா என்னை டாக்டராகவோ, இஞ்சினியராகவோ ஆக்க வேண்டும் என்று கனவு கண்டாங்க. ஆனா எனக்கு எட்டாவது படிக்கும்போதே மீடியா சம்பந்தப்பட்ட விஸ்காம் பண்ணிட்டு மீடியாவுக்குள்ள வரணும்ங்கிற ஆசை வந்துருச்சி. என் சொந்த ஊர் மதுரையில ப்ளஸ் டூ முடிச்ச பிறகு அங்கேயே காலேஜ்ல படிக்க வைக்க நெனச்சாங்க. ஆனா நான் என் பாட்டியோட 2008ல சென்னைக்கு வந்து விஸ்காம் படிச்சேன். பாட்டி எனக்கு முழு சப்போர்ட் பண்ணினாங்க. முதல்ல சென்னை பாக்க புதுசா தெரிஞ்சிது. அப்புறம் பழகிக்கிட்டேன். காலேஜ்ல படிக்கும்போதே லைப்ல அடுத்தகட்டத்துக்கு போறதுக்கான வாய்ப்புகள் வந்தது. ரேடியோ மற்றும் சில சேனல்கள்ல தொகுப்பாளினியா நுழைஞ்சேன். படிச்சு முடிக்கிறப்ப, ஒரு விளம்பர நிறுவனத்துல வேலை கெடைச்சுது.ஆனா அங்க நடந்த பாலிடிக்ஸ்ல என்னை வேறு ஸ்டேட்டுக்கு மாத்திப்போட்டாங்க. அதனால் அந்த வேலைய ரிசைய்ன் பண்ணிட்டு திரும்பவும் ஆன்ஸ்கிரீனுக்கு வந்தேன்.


ராஜ் டி.வில லைப் புரோக்ராம் பண்ணினேன். அதுக்கு அப்புறம் விஜய் டி.வியில கனா காணும் காலங்கள் சீசன் 4ல நடிக்கிற வாய்ப்பு கெடைச்சுது.அதுல மஞ்சு என்கிற லீட் ரோல்ல நடிச்சேன. அது இப்பவரைக்கும் பேசப்படுது. 250 எபிசோடுல நடிச்சேன். ஒரு வருசம் வந்தது. அதுக்கு அப்புறம் என்னோட பேஷனே மைக்தான். மைக் மூலமா என்னவெல்லாம் பண்ண முடியுமோ அதையெல்லாம் செஞ்சேன்.அதோட புடிச்ச விசயம்ங்கிறதால ரொம்ப சந்தோசமாக செய்துகிட்டு வர்றேன். விஜய் டிவியில ஒரு வருசம் வந்த பிறகுதான் நமக்கு ஆன்ஸ்கிரீன்தான் செட்டாகும்னு முடிவு பண்ணி சேனலையே தொடர ஆரம்பிச்சேன்.


சரவணன் மீனாட்சியில் நடித்தது பற்றி?


சரவணன் மீனாட்சி தொடரில் காயத்ரி என்ற எனது பெயரிலேயே நடித்தேன். கிராமத்து வேடம். பாவாடை தாவணி கட்டி நடிச்சேன். நல்ல அனுபவமாக இருந்தது. எனக்கு நிறைய சேனல்கள்ல இருந்து நடிக்க வாய்ப்பு வருது. ஆனால விஜய் டிவியில மட்டும்தான் நடிக்கணும்னு இருக்கேன். ஏன்னா எனக்கு நடிப்பு மட்டும்தான் தொழில்ன்னா எல்லா சேனல்லயும் பண்ணலாம். ஆனா நடிப்பு, தொகுப்பாளினி, டான்ஸ் ஸ்கூல்னு நான் பல துறைகள்லயும் இருக்கிறதால என்னால நிறைய சீரியல்கள்ல நடிக்க முடியாது. அதோட விஜய் டிவியில பழக்கப்பட்ட ஆட்கள். எனக்கு தகுநத மாதிரி கேரக்டர்களை மாத்திக்கிடுவாங்க. ஆக, மதுரையில இருந்து சென்னைக்கு வந்ததுக்கு அப்பா அம்மாவ திருப்திபடுத்தியாச்சு. இப்ப பேமிலியையே சென்னையில செட்டில் பண்ணியாச்சு.


சீரியல்ல பிசியா நடிச்சிக்கிட்டிருந்தப்ப, டான்ஸ் ஸ்கூல எப்படி மெயின்டெயின் பண்றீங்க?


சீரியல்கள் போய்க்கிட்டிடேயிருக்கும்போது ஒரு கேள்விக்குறி. இது எததனை நாள் நீடிக்கும் என்றொரு நிலை வந்தது. அதுவும் கேர்ள்ஸக்கு ரொம்ப லிமிடெட் பீரியடுதான். அதுக்கு அப்புறம் லாங் லைப்புக்கு ஏதாவது பண்ணனும்னு யோசித்தபோதுதான், லெட் டான்ஸ் என்ற பெயர்ல ஒரு டான்ஸ் பளளி ஆரம்பிச்சேன். 7 மாசமா நடந்துக்கிட்டிருக்கு. இங்க டான்ஸ் மட்டுமில்லாம யோகா, ரூபா என்கிற பிட்னஸ் எல்லாம பண்றேன் முககியமா திருமணமான பெண்கள் முதல் 60 வயது பெண்கள் வரை இதை செய்யலாம். இதனால் அவர்களது பாடி நல்ல பிட்டாக வைத்துக்கொள்ள உதவும்.


சினிமாவில் நடிக்கும் ஆர்வம் எப்படி?


அமலாபாலை அறிமுகம் செய்த விகடகவி பட நிறுவனம் தயாரிக்கும் குரங்கு கையில பூமாலைன்னு ஒரு படத்துல நடிக்கிறேன். கோலிசோடா படத்துல நடிச்ச ஹீரோயினோட செகண்ட் லீடா பண்ணியிருக்கேன். இப்ப இருக்கிற இளைஞர்கள் எப்படியெல்லாம் லவ் பண்றாங்க என்பதை சொல்லுற படம். அந்த படம் கூடிய சீக்கிரமே தியேட்டருக்கு வந்துடும்.


சினிமாவுல எந்த மாதிரி வேடங்களை எதிர்பார்க்கிறீங்க?


பெரிய ஹீரோயினியாகனும்ங்கிற ஆசையெல்லாம் எனக்கு இல்லை. ஒரு கேரக்டர் நான் பண்ணினா அது ஏதாவது மெசேஜ் சொல்ற மாதிரியா இருக்கணும். படம் பார்க்கிறவங்க மனசுல பதியணும். முக்கியமாக பேமிலியில இருக்கிறவங்க ஏத்துக்கிற மாதிரியான ரோலா இருக்கணும்.


அதேமாதிரி டிவியில வில்லியா நடிச்சாதான் சீக்கிரம் ரீச் ஆகலாம்னு சொல்றாங்க.ஆனா எங்க வீட்ல அப்படியெல்லாம் நடிக்க வேண்டாம்ங்கிறாங்க. ஏன்னா வில்லியா நடிக்கிறவங்களே பாத்தா நாங்களே திட்டுவோம். அதனால மத்தவங்க மதிக்கிற மாதிரியான, பாராட்டுற மாதிரியான வேடங்கள்ல நடிக்கவே ஆசைபபடுறேன்.


வில்லி நடிகைகளில் உங்களுக்கு பிடித்தமானவர் யார்?


சீரியல்களில் பல நடிகைகள் வில்லியாக நடித்திருந்தாலும், படையப்பா நீலாம்பரி ரம்யா கிருஷ்ணனின் நடிப்புதான் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரது நடிப்பு மிரட்டலாக இருந்தது.


டைட்டில் வேடங்களில் எப்போது நடிப்பீர்கள்?


நான் எந்த வாய்ப்பையும் தேடிச்செல்வதில்லை. எனக்கு வருவதில் நல்லதாக பில்டர் பண்ணி நடிக்கிறேன். அதேமாதிரி டைட்டில் வேடங்கள் வரும்போது எனக்க பிடித்தமானதாக இருந்தால் கட்டாயம் நடிப்பேன். எனக்கு இருக்கிற ப்ரண்ட்ஸ் எல்லாருமே ஹெல்ப் பண்றாங்க. எந்த விசயமா இருந்தாலும் முதல்ல எங்கிட்ட ஷேர் பண்ணுவாங்க.


சினிமாவில் புடிச்ச ஹீரோ யார்?


எங்க பேமிலியே தல அஜீததின் பேன்ஸ்தான். இதை நான் பதிவு செய்ய விரும்புறேன். அவரோட சிம்பிளிசிட்டி எனக்கு ரொம்ப பிடிக்கும்.எவ்ளோ உயர்ந்த இடத்துல இருந்தாலும் பொண்ணு படிக்கிற ஸ்கூலா இருந்தாலும் சரி, ஓட்டு போடப்போகும்போதும் சரி எதுவாக இருந்தாலும் மற்றவர்களை மாதிரிதான் தன்னையும் நெனச்சுக்குவாரு. தனக்குன்னு எந்த முக்கியத்துவத்தையும் எதிர்பார்க்கமாட்டாரு. நான் பெரிய நடிகன் என்கிற எண்ணம் அவருகிட்ட இருக்காது. அவரது இந்த சிம்பிளிசிட்டிதான் எங்க குடும்பத்துக்கு தலகிட்ட பிடிச்ச விசயம்.


அபபடின்னா தலகூட டூயட் பாடணும்ங்கிற ஆசை இருக்கா?


கண்டிப்பா இல்லை. அப்படியொரு நல்ல நடிகருக்கு தங்கையா நடிக்கணும்னுதான் ஆசை இருக்கு. அந்த ரோல்ல மனசார நடிப்பேன்.


உங்க நடிப்பை பார்த்துட்டு பேமிலியில என்ன சொல்வாங்க?


கிண்டலும் கேலியும் பண்ணுவாங்க. என்ன என்னெல்லாம் கிண்டல் பண்ண முடியுமோ அதெல்லாம் பண்ணுவாங்க. அந்த மாதிரி கிண்டல் பண்ணுமபோதுதான் இன்னும் நல்லா நடிக்கணும்ங்கிற வெறி வரும். ஆனா யாராவது உங்க பொண்ணை டிவியில பார்த்தேன்னு அவங்ககிட்ட சொன்னா பெருமைப்படுவாங்க.


இப்போதைய தொடர்களில் தவறான உறவுமுறைகளை சொல்லும் கதைகள் அதிகம் வருவது பற்றி?


அது எங்களுக்கே கஷ்டமாத்தான் இருக்கு. ஆனாலும் அதைப்பற்றியெல்லாம் மற்றவர்களிடம் எதிர்ப்போ, கருத்தோ சொல்லும அளவுக்கு நான் ஒன்றும பெரிய ஆள் இல்லை. மேலும், வீட்டில் குடும்பத்துடன் அமர்ந்து அந்த மாதிரியான தொடர்களை பார்க்குமபோது கஷ்டமா இருககும. அதேமாதிரி தண்ணி அடிக்கிற மாதிரியெல்லாம் காட்டுறாங்க. அதெல்லாம் தேவையில்லாததுதான். அதனால் அன்றாடம் ஒவ்வொரு வீட்டை தேடியும் செல்லும் சீரியல்களில் தவறான உறவுமுறைகளை சொல்வதை தவிர்ப்பது நல்லது என்பது எனது தாழ்மையான கருத்து என்கிறார் காயத்ரி.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், அருந்ததி'' : டிவியில் இன்றைய திரைப்படங்கள் ''நான் ஏன் பிறந்தேன், வரலாறு, வெனம், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in