ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சின்னத்திரையின் நட்சத்திர தொகுப்பாளினி ரம்யா. சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குவார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்து பேசியிருக்கிறார். அதனை தான் அடைந்த பிறவி பலன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: ஒரு நாள் ஒரு நிகழ்ச்சியின் படப்பிடிப்பிற்காக ஏவிஎம் ஸ்டூடியோவுக்கு சென்றேன். அப்போது அங்கு நிறைய கூட்டம் இருந்தது. பரபரப்புடன் செயல்பட்டுக்கொண்டிருந்தார்கள். என்னவென்று விசாரித்தபோது லிங்கா படத்தின் படப்பிடிப்பு நடப்பதாக சொன்னார்கள். அப்போது எனக்கு ரஜினி சாரை பார்க்கும் ஆர்வம் ஏற்பட்டது. கூட்டத்தை தாண்டிச் சென்று அவரது தனி உதவியாளரிடம் ரஜினி சாரை சந்திக்க முடியுமா? என்று கேட்டேன் சாரிடம் கேட்டு சொல்வதாக கூறிச் சென்றார். நான் அங்கு ஓரமாக நின்று கொண்டிருந்தேன். சற்று நேரத்தில் அந்த ஆச்சர்யம் நடந்தது.
கேரவனில் இருந்து ரஜினி சார் இறங்கி என்னை நோக்கி நடந்து வந்தார். நான் ஓடிச் சென்று நான்தான் ரம்யா என்று சொல்வதற்குள் "ஹாய் ரம்யா எப்படி இருக்கீங்க" என்றார் அவர். எனக்கு பதிலே சொல்லத் தோன்றவில்லை. அவரோடு சில மணித்துளிகள் பேசினேன். கடைசியில் அவருடன் போட்டோ எடுக்க விரும்பினேன். அதற்கு சம்மதித்த அவர் என்னை கட்டிப்பிடித்துக் கொண்டார். நான் அவர் தோளில் சாய்ந்து கொண்டேன்.
நான் தொகுப்பாளினியாகி பல வருடம் ஆகிவிட்டது. ரஜினி சாரை பல மேடைகளில் சந்தித்திருக்கிறேன். அவருடன் தனியாக பேசும் வாய்ப்போ, போட்டோ எடுத்துக் கொள்ளும் வாய்ப்போ கிடைத்ததில்லை. இது எனக்கு கிடைத்த அருமையான சந்தர்ப்பம். தொகுப்பாளியானதற்கான பிறவி பலனை அடைந்து விட்டேன் என்கிறார் ரம்யா.