'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
ஒரு காலத்தில் ம.தி.மு.வின் பொதுச்செயலாளர் வைகோவின் ஜெராக்ஸ் காப்பியாக இருந்தவர் நாஞ்சில் சம்பத். அந்த கட்சியின் நம்பர் ஒன் நட்சத்திர பேச்சாளர். ஒரு கட்டத்தில் அவரோடு கருத்து வேறுபாடு கொண்டு கட்சியை விட்டு விலகினானர். பிறகு அ.தி.மு.க.வில் இணைந்து இன்னோவா காரை பரிசாக பெற்றார். தற்போது சின்னத்திரை தொகுப்பாளராகி விட்டார் நாஞ்சில் சம்பத்.
வேந்தர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு சொல் கேளீர் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இயக்குனர் விசு நடத்திய மக்கள் அரங்கம் நிகழ்ச்சி பாணியிலானது இது. பல்வேறு தலைப்புகளின் கீழ் பங்கேற்பாளர்கள் விவாதம் செய்ய அதனை கேட்டு தீர்வு சொல்கிற நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் முதல்பட்ட படப்பிடிப்பு கோவையில் நடந்துள்ளது. தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.