ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜய் டி.வியில் ஒளிபரப்பான மகாபாரதம் தொடருக்கு பிறகு புராண தொடர்களுக்கான மவுசு கூடியிருக்கிறது. அதனால் சேனல்கள் இந்தியில் ஏற்கெனவே ஒளிபரப்பான புராண தொடர்களை வாங்கி டப் செய்து ஒளிபரப்புகிறது.
அந்த வரிசையில் புதுயுகம் தொலைக்காட்சியல் கடந்த 17ந் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது ஸ்ரீகிருஷ்ண அவதாரம். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடர் மறுநாள் காலை 11 மணிக்கு மறுஒளிபரப்பும் செய்யப்படுகிறது.
இந்த தொடரில் அரக்கன் கம்சனை அழித்த பிறகு துவாரகையில் கிருஷ்ணர் நடத்தும் நல்லாட்சியை மையமாக கொண்டு கதை நகர்த்தப்படுகிறது. சாகாவரம் பெற்ற காலியவான், துவாரகை நகரம் மீது பெரும்படையுடன் போர் தொடுப்பதும். அந்த போரை எதிர்கொள்ளும் கிருஷ்ணரின் தந்திரங்களும், அதன் மூலம் சொல்லப்படும் நீதிகளும் திரைக்கதையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீகிருஷ்ணரின் மனைவி ருக்மணி லட்சுமி தேவியாக அவதரித்து துவாரகை மன்னர் கிருஷ்ணரை காதலிப்பதும். அந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் லட்சுமியின் சகோதரன் ருக்மி கிருஷ்ணரை அழிக்க திட்டம் தீட்டுவதும் அதை முறியடித்து கிருஷ்ணர் லட்சுமியை கரம் பிடிப்பதும் இன்னொரு பகுதி கதை. அதிகமான கிராபிக்ஸ் பிரமாண்டங்கள், யுத்த காட்சிகள், காதல் காட்சிகள், செண்டிமெண்ட் என கலவையாக ஒளிபரப்பாகிறது.