பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
சின்னத்திரை வட்டாரத்தில் டிடி என்று செல்லமாக அழைக்கப்படுகிறவர் திவ்யதர்ஷினி. காப்பி வித் டிடி நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றவர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோவை கல்லூரி ஒன்றில் எலெக்ட்ரானிக் மீடியா படிக்கும் முதுகலை மாணவர்களுக்காக நடந்த தேர்தலில் "டிடி காப்பி வித் டிடி" நிகழ்ச்சியை எப்படி சலிக்காமல் கொண்டு செல்கிறார்கள். செலிபிரிட்டியை எப்படி கையாளுகிறார்? என்ன மாதிரி கேள்விகள் கேட்கிறார்-?" என்று விளக்கும்படி ஒரு கேள்வி கேட்கப்பட்டிருந்தது. இந்த கேள்வி இணையதளத்தில் வைரலாக பரவி பலரும் அதற்கு பதில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
இதுபற்றி திவ்யதர்ஷினி கூறியதாவது: அதை கேள்விப்பட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இணைய தளத்தில் வெளியான அந்த கேள்வித் தாளையும் பார்த்தேன். நான் உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்டவள் என்பதை உணர்கிறேன். காப்பி வித் டிடி இந்த அளவுக்கு ரீச்சாகும் என்று எதிர்பார்க்கவில்லை. நான் அந்த கல்லூரிக்கு சென்று பதில் எழுதிய மாணவர்களை சந்தித்து பேச ஆவலாக இருக்கிறேன். நான் ஒரு காலத்தில் கல்லூரியில் லெக்சரராக பணியாற்றி இருக்கிறேன். என்றார்.