டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சின்னத்திரை வட்டாரத்தில் டிடி என்று செல்லமாக அழைக்கப்படுகிறவர் திவ்யதர்ஷினி. காப்பி வித் டிடி நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றவர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோவை கல்லூரி ஒன்றில் எலெக்ட்ரானிக் மீடியா படிக்கும் முதுகலை மாணவர்களுக்காக நடந்த தேர்தலில் "டிடி காப்பி வித் டிடி" நிகழ்ச்சியை எப்படி சலிக்காமல் கொண்டு செல்கிறார்கள். செலிபிரிட்டியை எப்படி கையாளுகிறார்? என்ன மாதிரி கேள்விகள் கேட்கிறார்-?" என்று விளக்கும்படி ஒரு கேள்வி கேட்கப்பட்டிருந்தது. இந்த கேள்வி இணையதளத்தில் வைரலாக பரவி பலரும் அதற்கு பதில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
இதுபற்றி திவ்யதர்ஷினி கூறியதாவது: அதை கேள்விப்பட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இணைய தளத்தில் வெளியான அந்த கேள்வித் தாளையும் பார்த்தேன். நான் உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்டவள் என்பதை உணர்கிறேன். காப்பி வித் டிடி இந்த அளவுக்கு ரீச்சாகும் என்று எதிர்பார்க்கவில்லை. நான் அந்த கல்லூரிக்கு சென்று பதில் எழுதிய மாணவர்களை சந்தித்து பேச ஆவலாக இருக்கிறேன். நான் ஒரு காலத்தில் கல்லூரியில் லெக்சரராக பணியாற்றி இருக்கிறேன். என்றார்.