சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் |
பொதுவாக டாப் ஹீரோக்கள் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருப்பதையே கவுரவ குறைச்சலாக நினைப்பார்கள். வேறு வழியில்லாமல் உறுப்பினராக சேர்ந்தாலும் சங்கத்தின் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டார்கள். ரஜினி, கமல், விஜய், அஜீத்தெல்லாம் நடிகர் சங்க தேர்தலுக்கு ஓட்டளிக்க வருவதோடு சரி. மற்றபடி அந்தப் பக்கம் தலைகாட்ட மாட்டார்கள். ஆனால் வளர்ந்து வரும் நடிகரான சிவகார்த்திகேயன் சின்னத்திரை நடிகர் சங்கத்தில் நிரந்தர உறுப்பினராகியிருக்கிறார். இதற்கான சந்தாவை செலுத்தி உறுப்பினர் அட்டை பெற்றிருக்கிறார்.
"என் தாய்வீடு சின்னத்திரைதான். சின்னத்திரைதான் என் திறமையை அங்கீகரித்ததோடு அதனை சினிமாவுக்கும் கொண்டு சென்றது. சின்னத்திரை நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருப்பதிலும், அதற்காக உழைப்பதிலும் பெருமைப்படுகிறேன். என்னை சின்னத்திரை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம்" என்கிறார் சிவகார்த்திகேயன்.
"சிவகார்த்திகேயன் சின்னத்திரை என் தாய்வீடுன்னு சொன்னது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது. அவர் உறுப்பினர் ஆனதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. டி.வி, சினிமா இரண்டுமே ஒரே குடும்பத்தில் பிறந்த பிள்ளைகள்" என்கிறார் சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவி நளினி.