பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஆழ்வார் படத்தில் அஜீத்தின் தங்கையாக நடித்தவர் ஸ்வேதா, மும்பை பொண்ணு. அதன் பிறகு சில படங்களில் தங்கை கேரக்டரில் நடித்தவர் வள்ளுவன் வாசுகி படத்தில் ஹீரோயின் ஆனார். இதயம் திரையரங்கம், கூட்டாஞ்சோறு, நான்தான் பாலா, பட்டைய கிளப்பணும் பாண்டியா படங்களில் ஹீரோயினாக நடித்தார். தற்போது சின்னத்திரையில் நடித்து வருகிறார்.
சின்னத்திரையில் அதிக சுதந்திரம் இருக்கிறது என்கிறார் ஸ்வேதா. அவர் மேலும் கூறியதாவது:
சினிமாவில் நமக்கு மேல் பெரிய சீனியர்கள் இருப்பார்கள். அதனால் அவர்களுக்கு மரியாதை கொடுத்து பவ்யமாக இருக்க வேண்டும். சிலர் வந்தால் எழுந்து நின்ற மரியாதை தரவேண்டும். எதையும் பார்த்து பார்த்து செய்யணும். சின்னத்திரையில் அப்படியில்லை. சுதந்திரமாக இருக்கலாம். எல்லோருடனும் சகஜமாக பழகலாம்.
சினிமா மாதிரி கவர்ச்சியாக நடிக்க வேண்டியதில்லை. மரத்தை சுற்றி டூயட் பாட வேண்டியதில்லை. நமக்கு கொடுத்த கேரக்டரை சரியாக செய்து முடித்துவிட்டு நிம்மதியாக இருக்கலாம். இந்த காரணங்களால்தான் நான் சின்னத்திரையை தேர்ந்தெடுத்தேன். ஆனாலும் சினிமாவை விட்டு முழுமையாக விலகவில்லை. தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறேன். என்கிறார் ஸ்வேதா.