ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான பிரசாத் பசுபுலேட்டியின் மகள் ரேஷ்மா பசுபுலேட்டி, அமெரிக்காவில் பிறந்து, வளர்ந்து, படித்தவர், ஏர்ஹோஸ்டாக பறந்து கொண்டிருந்தவர் இப்போது பிசியான சீரியல் நடிகை.
நிகழ்ச்சி தொகுப்பாளினியாக சின்னத்திரையில் அறிமுகமாகி, அதன் பிறகு வாணி ராணி, வம்சம், சுந்தரகாண்டம் உள்பட பல சீரியல்களில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். தற்போது என் இனிய தோழியே தொடரில் ஹீரோயினியாகி இருக்கிறார்.
இதுபற்றி ரேஷ்மா கூறியதாவது: பல சீரியல்களில் வேறு வேறு கேரக்டர்களில் நடிப்பதை விட ஒரே சீரியலில் ஹீரோயினாக நடிப்பதுதான் நல்லது. முழு கவனத்தையும் அந்த கேரக்டருக்கு கொடுக்க முடியும். ஆனாலும் சீரியல் ஹீரோயினாக தொடர கடுமையாக உழைக்க வேண்டும். காரணம் ஹிரோயின் இல்லாத எபிசோடே இருக்க முடியாது. தற்போது நடிக்கும் என் உயிர் தோழியே சீரியல் சமூக பிரச்னையை பேசும் சீரியல், ஆடிசன் வைத்துதான் என்னை தேர்வு செய்தார்கள். இயக்குனர் செந்தில்குமாரும், தயாரிப்பாளரும் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றுவேன். என்கிறார் ரேஷ்மா.